Saturday, 8 February 2014

Leave a Comment

கவுதம் மேனன் அன்றும் இன்றும்; என்றுமே தல தலதான்...!!



கவுதம் மேனன் அன்று..

மூன்று முறை மீடியாவில் அஜீத் தை விமர்சித்து வெளிப்படையாக பேட்டிகள் கொடுத்திருந்தார் கவுதம் மேனன்.

ஆனால் ஒரு முறைகூட அதற்கு பதிலடி கொடுத்ததில்லை அஜீத்.

இப்போதுதான் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் அஜீத்.

'இனிமேல் அஜீத் எனக்குத் தேவை இல்லை' என்ற கௌதம் மேனனின் கமென்ட் குறித்த என்ன சொல்கிறார்?

"சினிமாவில் நான் இல்லாமல் 10 படங்களை கௌதம் இயக்கிவிட்டார். அவர் இல்லாமல் நானும் 50படங்களை முடித்துவிட்டேன். இதுதான் என் சிம்பிள் பதில்!

கார் ரேஸில் ஆர்வம் இருப்பதால், அதற்காக வெளிநாடு போவதால், சினிமாவில் கவனம் செலுத்தலைன்னு சொல்றது அபத்தம். நான் எதில் ஈடுபட்டாலும் அதிலேயே மூழ்கிவிடுவேன். அது என் இயல்பு. கார் ரேஸுக்குப் போனதால் ஓர் இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். அதற்காக அதிலேயே இருந்துவிடுவேன் என்று அர்த்தமல்ல. இதோ, மீண்டும் நான் வந்துட்டேனே!" என்றார்.

கவுதம் மேனன் இன்று..

அஜீத்தை போல இதயம் கொண்ட ஒருவர் இன்டஸ்ட்ரியில் இல்லை என்று தெரிவித்துள்ளார் கௌதம்.

துப்பறியும் ஆனந்த் படத்தை கௌதம் அஜீத்தை வைத்து செய்வதாக இருந்த நேரம். முழுக்க கதையை சொல்லவில்லையா இல்லை கதையை அஜீத் மாற்றச் சொன்னாரா தெரியாது. கௌதம் படத்திலிருந்து அஜீத் விலகினார். அப்போது கௌதமிடம் எப்போது தல படத்தை இயக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு யார் தல என்று கேட்டார் கௌதம்.

காத்திருந்து படம் பண்ண அவர் என்ன சூர்யாவா இல்லை கமலா என்றும் கேட்டார். காலம் அனைத்தையும் தலைகீழாக்கிவிடும்.

நடுநிசி நாய்கள், நீதானே என்பொன்வசந்தம் படங்களின் தோல்வி, கோடிகள் கேட்டு நண்பர்களின் நீதிமன்ற நெருக்கடி, சூர்யாவின் திடீர் வெளியேற்றம் என்று கௌதமின் கதை வெளிறிக்கிடந்த நேரம் விரும்பி உள்ளே வந்தார் அஜீத். கௌதம் எனக்கொரு படம் பண்ணுங்க, தயாரிப்பாளர் ரத்னம் என்று ரத்தின சுருக்கமாக கௌதமின் எதிர்காலத்துக்கு பிரகாசமூட்டினார்.

அன்று அஜீத்துக்காக காத்திருக்க முடியாது என்றவர் இன்று அஜீத்தை உள்ளத்தில் நல்ல உள்ளம் என கொண்டாடுகிறார். பிளந்தால்தான் பலாப்பழத்தின் டேஸ்ட் தெரியும்.

0 comments:

Post a Comment