சேட்டை படத்திற்கு பிறகு தனது கவர்ச்சி சேட்டைகளை ஆந்திர ரசிகர்களிடம் காட்டி வரும் அஞ்சலி, குடும்பத்தில் வீசிய புயலால் உடம்பை கண்டுகொள்ளாமல் இருந்தார்.
அதனால் அங்கு சென்ற சில மாதங்களிலேயே பூதாகரமாக அவரது உடல்கட்டு ஊதி விட்டதாம். இதனால், இளவட்ட ஹீரோக்களெல்லாம் அஞ்சலியை ஓரங்கட்டிய நிலையில், நரைமுடி நாயகர்கள் மட்டுமே இப்போது அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
ஆனால், அப்படி வயதானவர்களுடன் நடனமாடும்போதுகூட அவர்களுக்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் தடுமாறும் அஞ்சலி, அடிக்கடி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓய்வெடுப்பதற்காக கேரவனுக்குள் சென்று பதுங்கி கொள்கிறாராம்.
இதைப்பார்த்து, சில நடன மாஸ்டர்கள் இனி அஞ்சலி கதாநாயகிக்கு செட்டாக மாட்டார் என்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திராவில் பரப்பி வருகிறார்களாம். இதனால், அஞ்சலியின் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்ற சில வளர்ந்து வரும் நடிகைகள் அதிரடி முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம்.
இதனால் கூடிய சீக்கிரமே ஆந்திராவில் அஞ்சலியின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment