Friday 28 February 2014

Leave a Comment

சினிமாக்காரர்களுக்கு இப்படியெல்லாம் நடக்குமா..? பதறும் நடிகை..!



உயரம் குறைவு, தெற்று பல் மைனசால் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதா என்றதற்கு கோபத்துடன் பதில் அளித்தார் சுவாதி. சுப்பிரமணியபுரம், போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி.

 அவர் கூறியதாவது: உயரம் குறைவால் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்று கேட்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. நான் அழகாக, கொஞ்சம் புஷ்டியாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். எனக்கிருக்கும் தெற்று பல் கூட ஒரு அழகுதான்.

அது எனக்கு பிளஸ் என்று பலர் பாராட்டி இருக்கிறார்கள். நான் மற்றவர்களுடன் அதிகம் பழக மாட்டேன். எனக்கு மேனேஜரோ, பப்ளி சிட்டி செய்வதற்காகவோ யாரும் கிடையாது. 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பின் சில வேடங்கள் பொருந் தாது என்று தவிர்த்து விடுகிறேன்.

என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கை தரும்படியான வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன்.

தமிழ், மலையாள படங்களில் ஹீரோயின்களுக்கு நல்ல வேடங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு சில மொழி படங்களில் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று மட்டுமே எண்ணுகிறார்கள். தெலுங்கு நடிகர் நிதினுடன் காதலா என்று கேட்கிறார்கள்.

 சுவாமி ரா ரா, கார்த்திகேயா ஆகிய படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தேன். இருவரும் நண்பர்கள் மட்டும்தான். எனக்கு காதலிக்க நேரம் கிடையாது.

 படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் வீட்டில் நிச்சயிக்கும் மாப்பிள்ளையைதான் மணப்பேன். இப்போது நடிப்பில்தான் கவனம்.

0 comments:

Post a Comment