Thursday 27 February 2014

Leave a Comment

எங்கு சென்றாலும் தற்பெருமை பேசும் சிவகார்த்திகேயன்...!



சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியின் 44 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

 இந்த விழாவில் பங்கேற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்த வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:

நான் பி.இ. எம்.பி.ஏ படித்திருந்தாலும் நடிப்புத் துறைக்கு விரும்பி வந்துள்ளேன். கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உங்களுக்கு பரிசுகள் வழங்கும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர்கள் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். மாணவ, மாணவிகள் பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள்.

இன்னும் 10 ஆண்டுகளில் சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது எண்ணமாகும். நீங்கள் படிக்கும் படிப்பு வாழ்க்கையில் அவசியம் உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

Post a Comment