Wednesday 26 February 2014

Leave a Comment

ஹீரோவாக மாறிய வில்லன் நடிகர்..!



ஜெயம் ரவியுடன் 'ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார்.

திரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட பல கதாநாயகிகள் கோபிசந்துடன் ஜோடியாக நடித்துள்ளனர். அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகர்கள் பட்டியலிலும் இவர் உள்ளார்.

கோபிசந்துக்கு ஏற்கனவே திருமணம் முடிவானது. ஹரிதா என்ற பெண்ணை மணக்கப் போவதாக அறிவித்தனர். திருமண தேதியும் முடிவானது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் ரத்தாகி விட்டது.

தற்போது மீண்டும் ஐதராபாத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் ஏற்பாடாகி உள்ளது. பிப்ரவரியில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

இவர் டோலிவுட்டில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘வான்டட்‘ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இப்படம் தமிழில் வேங்கை புலி என்ற பெயரில் திரைக்கு வருகிறது. அவருக்கு ஜோடியாக தீக்ஷா சேத் நடிக்கிறார்.

நாசர், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சக்ரி இசை. எஸ்.ஜிஆர்.பிரசாத், கோவை வேல்முருகன் தயாரிப்பு. பி.வி.எஸ்.ரவி இயக்கி உள்ளார்.

பெற்றோர் சம்பாதித்த பணத்தில் ஜாலியாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று எண்ணும் கோபிசந்த், தீக்ஷா மீது காதல் கொள்கிறார்.

அந்த காதலுக்காக சிலரை கொல்கிறார். அவர் எப்படி பிரச்னைகளிலிருந்து மீள்கிறார் என்பதுதான் கதை.

0 comments:

Post a Comment