Wednesday 26 February 2014

Leave a Comment

எட்டு வருடங்களுக்கு பிறகு ஏன் வந்தேனு தெரியுமா..?



எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் மகேந்திரன்.

 டிரைட்டன் மூவீஸ் சார்பில் எஸ்.சரவணன் தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.

சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது: மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நேர்மையான படைப்புகளை இதுவரைக் கொடுத்தேன்.

 படம் இயக்குவதில் எனக்கென்று சில நியதிகள் இருக்கிறது. அதன்படிதான் இயக்குவேன். அந்த நியதிகளுக்கு யாரும் ஒத்து வராததால் நான் படம் இயக்கவில்லை.

இப்போது ஒரு தயாரிப்பாளர் என் நியதிகளுக்கு ஒப்புக் கொண்டு வந்திருக்கிறார். இயக்க வந்திருக்கிறேன்.

என் படங்களுக்கு இளையராஜா தன் இசை மூலம் வசனம் எழுதியிருக்கிறார். என் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

 அவர்தான் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.

ஒரு நடுத்தர குடும்பம் சந்திக்கும் ஒரு பிரச்னையின் வாயிலாக இன்றைய சமூகப் பிரச்னைகளை அலசுகிறேன்.

0 comments:

Post a Comment