Friday 28 February 2014

Leave a Comment

விஜய் டிவியை மிரட்டியே பணியவைத்த இயக்குனர்...!



இலங்கையில் விஜய் டிவி சார்பில் நடைபெற உள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் மானமுள்ள தமிழர்களுக்கு அது பதில் சொல்லியாக வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருந்தார் டைரக்டர் கெளதமன்.

இதையடுத்து நேற்றும் இரவோடு இரவாக விஜய் டிவியின் சார்பில் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கும் தங்களது சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விஜய் டிவி சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :

தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மான்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றும் உறுதியான நிலைப்பாடுகளுடனே விஜய் டிவி இருந்திருக்கிறது. இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், தி்றமையையும் முன்னிறுத்துவதை தனது முதல் கடமையாக வைத்துள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றிய உண்மைக்கு புறம்பாக வெளிவரும் சில செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்…

மார்ச் 1, 2 தேதிகளில் இலங்கையில் நடக்கின்ற கலை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல இதற்கு முன் விஜய் டிவி இலங்கையில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் நடத்தியது இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் அனைத்து செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை. விஜய்டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பது தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் விஜய்டிவியின் லோகோவை போட்டு அங்கு விளம்பரப்படுத்தும் விழாக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? எந்த சந்தேகத்துக்கு விஜய் டிவி சார்பில் சரியான விளக்கம் தரப்படவில்லை.

இதற்கிடையே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராகவும் தமிழகத்தில் மாணவர்கள் , உணர்வாளர்கள் பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அனைவரும் நாடு திரும்பி உள்ளனர்.

0 comments:

Post a Comment