ஆடுகளம் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்சி. அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என நம்பினார்.
மும்பைக்கு ஜாகை மாறிய டாப்சி டாப்சி ஆனால் அவர் நம்பிக்கை மோசம் போனது. பெரிய வாய்ப்புகள் இல்லை.
எந்த பெரிய ஹீரோவுடனும் அவரால் ஜோடியாக நடிக்க முடியவில்லை. அப்படி வந்த ஒரு வாய்ப்பிலும் இரண்டாவது நாயகி வேடம்.
லூசுத்தனமான அந்த பாத்திரமும் எடுபடாமல் போய்விட்டது.
இப்போதைக்கு முனி 3, வை ராஜா வை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஹைதராபாதில் தங்கி தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் டாப்சி.
இந்த நிலையில் இனி தமிழில் அதிக படங்கள் இல்லை என்பதால் இந்திக்குப் போனார்.
சாஸ்மி பதூர் படத்தில் நடித்தார்.
அந்தப் படத்தின் வெற்றியால் தொடர்ந்து இந்திப் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.
இப்போது ரன்னிங் ஷாதி.காம் படத்தில் நடித்து வருகிறார்.
இனி இந்திப் படங்களில் நடிக்க வசதியாக, மும்பையிலேயே ஒரு வீடு எடுத்துத் தங்க முடிவு செய்துள்ளார்.
தீவிரமாக வீடு தேடிய அவர், இப்போது ஒரு ப்ளாட்டில் தங்கி புதிய வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம்.
0 comments:
Post a Comment