Friday 28 February 2014

விஜய் சேதுபதியை நம்பி நான் இல்லை - ஐஸ்வர்யா பேட்டி..!



கோலிவுட்டின் சமீபகாலக் கிசுகிசுவாகப் பேசப்பட்டுவரும் செய்திகளில் முக்கியமானது விஜய் சேதுபதியின் சிபாரிசின் பேரில் நடிகை ஐஸ்வர்யாவுக்கு நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுவருவதாகக் கிளம்பியிருக்கும் வதந்திகளே. ஆனால் இதனை ஐஸ்வர்யா மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபமாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அட்டக்கத்தி திரைப்படத்தில் தான் நடித்ததன் மூலமே தனக்கு ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் கிடைத்ததென்று கூறியுள்ளார். மேலும் தான் இந்தப் படங்களில் நடித்ததற்கும், விஜய் சேதுபதி இந்த வாய்ப்புக்களுக்குப் பின்னணியில் உள்ளார் என்ற கிசுகிசுக்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளாராம்.

ஐஸ்வர்யா தற்பொழுது அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகிவரும் திருடன் போலீஸ் படத்திலும், தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்துவரும் காக்கா முட்டை படத்திலும் நடித்துவருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாடா நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+

நீதிக்கு கிடைத்த வெற்றி...உதயநிதி படத்துக்கு வரி விலக்களிக்க உத்தரவு..!



உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்த இது கதிர்வேலன் காதல் படம் சமீபத்தில் வெளியானது.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. இதைத் தொடர்ந்து வரி விலக்கு கமிட்டிக்கு விண்ணப்பத்தினர் படக்குழுவினர். ஆனால் வரிவிலக்கு கொடுக்கவில்லை.

இதனால் உதயநிதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடாந்தார். “எனது படத்துக்கு அரசியல் உள்நோக்கத்துடன் வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது தவறானது. என் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிடவேண்டும்” என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதின்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்தார். பதில் மனு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை தொடர்ந்து “இது கதிர்வேலன் காதல் படத்துக்கு தமிழக அரசின் கமிட்டி ஆய்வு செய்து வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

“படம் கடந்த பெப்ரவரி 14ம் திகதி வெளியானது. 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வரிவிலக்கால் உதயநிதிக்கு பெரிய இலாபம் எதுவும் ஏற்படப் போவதில்லை. கோர்ட் உத்தரவை தமிழக அரசு மதித்தால் இதுவரை வசூலித்த தொகையை அரசு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கும்” என்று சட்டவல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
+

இதுதாங்க என்னோட ஒரிஜினல்...அனன்யாவின் புது அவதாரம்..!



நடிகை அனன்யா ஒரு வில்வித்தை வீராங்கணை என்பது பலரும் அறிந்திராத ஒன்று. நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்து இரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர்.

திடீரென்னு தன் தந்தை வயதுள்ள ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்தார். அதன் பிறகும் தொடர்ந்த நடித்து வருகிறார்.

இவர் நடித்த புலிவால் சமீபத்தில் வெளிவந்தது. தற்போது அதிதி படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதோடு வருகிற ஏப்ரல் மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் மாநில வில்வித்தை போட்டியில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

2012ம் ஆண்டு நடந்த போட்டியில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தார் அனன்யா. கேரள மாநில அணிக்காக தேசிய அளவிலும் விளையாடி இருக்கிறார்.

அடுத்த போட்டியில் கலந்து கொள்ளப்போவது பற்றி அனன்யா கூறியதாவது: “வில்வித்தையில் தேசிய அளவில் முதல் இடம் பிடிப்பது என் லட்சியம். ஐந்து வருட போராட்டத்துக்கு பிறகுதான் மாநில அளவில் சாம்பியன் ஆனேன். சென்ற ஆண்டு சென்னையில் தேசிய போட்டிகள் நடந்தது.

அப்போது நான் ஒரு தெலுங்கு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் முழு நேரமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். வருகிற சம்மர்ல நடக்கிற போட்டியில் கலந்துகிட்டு நிச்சயம் ஜெயிப்பேன். ஒரு நாள் தேசிய சாம்பியன் ஆவேன். என் முயற்சிகளுக்கு என் கணவர் ஆஞ்சநேயன் முழு ஆதரவும், ஊக்கமும் தந்து வருகிறார்” என்கிறர் அனன்யா.
+

காஜலுக்கு ஆப்பு வைத்த நெருங்கிய நண்பர்...!



துபாயில் காஜலுடன் சுற்றிய வாலிபர் அவரது பல பாய் பிரண்ட்களில் ஒருவர் என்றார் காஜலின் தங்கை நிஷா.
சமீப காலமாக ஹீரோயின்கள் தங்கள் காதலர்களுடன் டேட்டிங் என்ற பெயரில் வெளிநாடுகளில் சுற்றி திரிவதுடன், நண்பர்களின் பார்ட்டிகளிலும் கலந்து கொள்கின்றனர்.

துப்பாக்கி, ஜில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். சமீபத்தில் இவரது தங்கை நிஷாவுக்கு அவரது காதலன் கரண் வலேச்சா என்பவருடன் திருமணம் நடந்தது.

அக்காவுக்கு திருமணம் (காஜல்) செய்யாமல் தங்கைக்கு திருமணம் செய்வது ஏன் என்ற போது, நான் சினிமாவில் பிசியாக இருப்பதால் எனது திருமணத்தை தள்ளி போட்டிருக்கிறேன் என்று காஜல் பதில் அளித்தார்.

நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என்ற போது, யாரையும் காதலிக்கவில்லை என்றார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் தனது பாய் பிரண்டுடன் துபாயில் சுற்றித் திரிந்த காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து காஜல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவரது தங்கை நிஷா கூறும்போது, ‘காஜலுக்கு நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது. அவர்களுடன் இணைந்து எடுத்து கொண்ட பல்வேறு படங்களை அவரே தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதுபோல்தான் இந்த படமும். இதை ஊதி பெருக்க பார்க்கிறார்கள். இதுபற்றி யாரும் பெரிய அளவில் கற்பனையை வளர்த்து கொள்ள வேண்டாம். யாரையாவது காதலித்தால் அதை காஜல் தானாகவே முன்வந்து வெளியில் சொல்வார் என்றார்.
+

விஜய் டிவியை மிரட்டியே பணியவைத்த இயக்குனர்...!



இலங்கையில் விஜய் டிவி சார்பில் நடைபெற உள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் மானமுள்ள தமிழர்களுக்கு அது பதில் சொல்லியாக வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருந்தார் டைரக்டர் கெளதமன்.

இதையடுத்து நேற்றும் இரவோடு இரவாக விஜய் டிவியின் சார்பில் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கும் தங்களது சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விஜய் டிவி சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :

தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மான்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றும் உறுதியான நிலைப்பாடுகளுடனே விஜய் டிவி இருந்திருக்கிறது. இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், தி்றமையையும் முன்னிறுத்துவதை தனது முதல் கடமையாக வைத்துள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றிய உண்மைக்கு புறம்பாக வெளிவரும் சில செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்…

மார்ச் 1, 2 தேதிகளில் இலங்கையில் நடக்கின்ற கலை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல இதற்கு முன் விஜய் டிவி இலங்கையில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் நடத்தியது இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் அனைத்து செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை. விஜய்டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பது தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் விஜய்டிவியின் லோகோவை போட்டு அங்கு விளம்பரப்படுத்தும் விழாக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? எந்த சந்தேகத்துக்கு விஜய் டிவி சார்பில் சரியான விளக்கம் தரப்படவில்லை.

இதற்கிடையே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராகவும் தமிழகத்தில் மாணவர்கள் , உணர்வாளர்கள் பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அனைவரும் நாடு திரும்பி உள்ளனர்.
+

ஷீட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிய நடிகையால் பரபரப்பு...!



தமிழ்சினிமா தோன்றிய காலத்திலிருந்தே அம்மா கேரக்டருக்கும், அம்மா செண்டிமெண்டுக்கும் ஏகப்பட்ட முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு கதாநாயகி அம்மாவாக கோலோச்சி கொண்டு இருப்பார். அந்த வகையில் இப்போது சரண்யா பொன்வண்ணன் காலம் என்று சொல்லலாம்.

எல்லா உச்ச நடிகர்களுக்கும், வளரும் நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் தற்போது ‘என்னமோ நடக்குது’ படத்தில் விஜய் வசந்த்துக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த கேரக்டரைப் பற்றி அவரிடம் விசாரித்தால், சென்னை தமிழில் கொச்சையாக பதில் அளித்தார் .

கேரளாவில் பிறந்து சென்னை கான்வென்ட் பள்ளியில் படிப்பை முடித்த சரண்யாவிடம் இதை எதிர்பார்க்காததால், அதிர்ச்சியில் இருப்பவர்களுக்கான பதிலை டைரக்டர் ராஜபாண்டி சொன்னார். ‘இந்த படத்தில் அவர் சென்னையை சேர்ந்த ஒரு குடிசை பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்க உள்ளார். இதற்காக சென்னைக்கென்று உள்ள பிரத்தியேக சென்னைத் தமிழை கற்று கொண்டார், அது மட்டுமல்லாமல் அந்த பாஷையில் வெளுத்து கட்டி கொண்டு இருக்கிறார் ”.

‘என்னமோ நடக்குது’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு குடிசை பகுதியில் நடந்தது. இடைவிடாமல் ஐந்து நாட்கள் நடந்த படப்பிடிப்பில் அனுபவ சாலியான, தேசிய விருது பெற்ற சரண்யா எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தார்

அவருடன் அந்த காட்சிகளில் நடித்த விஜய் வசந்த் சற்று சிரமப்பட்டார். கடைசி நாளில் நாயகன் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் தர வேண்டிய காட்சி . நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருக்கும் போது அங்கிருந்த எல்லோரையும் சரண்யா உட்பட தன்னுடைய நடிப்பால் கவர்ந்தார் விஜய் வசந்த் .

ஒரே டேக்கில் நடித்து தானும் ஒரு கை தேர்ந்த நடிகர் தான் என்பதை நிரூபித்து , தேசிய விருது பெற்ற நடிகையடமே பாராட்டு பெற்றார் விஜய் வசந்த். ஆனால் பாராட்டியது சென்னை தமிழில் தானா என்பது தான் தெரியவில்லை .
+

காஜலுடன் சுற்றியது யார்..? நிஷா பரபரப்பு பேட்டி..!



துபாயில் காஜலுடன் சுற்றிய வாலிபர் அவரது பல பாய் பிரண்ட்களில் ஒருவர் என்றார் காஜலின் தங்கை நிஷா.

சமீப காலமாக ஹீரோயின்கள் தங்கள் காதலர்களுடன் டேட்டிங் என்ற பெயரில் வெளிநாடுகளில் சுற்றி திரிவதுடன், நண்பர்களின் பார்ட்டிகளிலும் கலந்து கொள்கின்றனர்.

துப்பாக்கி, ஜில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். சமீபத்தில் இவரது தங்கை நிஷாவுக்கு அவரது காதலன் கரண் வலேச்சா என்பவருடன் திருமணம் நடந்தது.

அக்காவுக்கு திருமணம் (காஜல்) செய்யாமல் தங்கைக்கு திருமணம் செய்வது ஏன் என்ற போது, நான் சினிமாவில் பிசியாக இருப்பதால் எனது திருமணத்தை தள்ளி போட்டிருக்கிறேன் என்று காஜல் பதில் அளித்தார்.

நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என்ற போது, யாரையும் காதலிக்கவில்லை என்றார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் தனது பாய் பிரண்டுடன் துபாயில் சுற்றித் திரிந்த காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து காஜல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவரது தங்கை நிஷா கூறும்போது, ‘காஜலுக்கு நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது. அவர்களுடன் இணைந்து எடுத்து கொண்ட பல்வேறு படங்களை அவரே தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதுபோல்தான் இந்த படமும். இதை ஊதி பெருக்க பார்க்கிறார்கள். இதுபற்றி யாரும் பெரிய அளவில் கற்பனையை வளர்த்து கொள்ள வேண்டாம். யாரையாவது காதலித்தால் அதை காஜல் தானாகவே முன்வந்து வெளியில் சொல்வார் என்றார்.
+

சினிமாக்காரர்களுக்கு இப்படியெல்லாம் நடக்குமா..? பதறும் நடிகை..!



உயரம் குறைவு, தெற்று பல் மைனசால் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதா என்றதற்கு கோபத்துடன் பதில் அளித்தார் சுவாதி. சுப்பிரமணியபுரம், போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி.

 அவர் கூறியதாவது: உயரம் குறைவால் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்று கேட்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. நான் அழகாக, கொஞ்சம் புஷ்டியாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். எனக்கிருக்கும் தெற்று பல் கூட ஒரு அழகுதான்.

அது எனக்கு பிளஸ் என்று பலர் பாராட்டி இருக்கிறார்கள். நான் மற்றவர்களுடன் அதிகம் பழக மாட்டேன். எனக்கு மேனேஜரோ, பப்ளி சிட்டி செய்வதற்காகவோ யாரும் கிடையாது. 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பின் சில வேடங்கள் பொருந் தாது என்று தவிர்த்து விடுகிறேன்.

என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கை தரும்படியான வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன்.

தமிழ், மலையாள படங்களில் ஹீரோயின்களுக்கு நல்ல வேடங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு சில மொழி படங்களில் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று மட்டுமே எண்ணுகிறார்கள். தெலுங்கு நடிகர் நிதினுடன் காதலா என்று கேட்கிறார்கள்.

 சுவாமி ரா ரா, கார்த்திகேயா ஆகிய படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தேன். இருவரும் நண்பர்கள் மட்டும்தான். எனக்கு காதலிக்க நேரம் கிடையாது.

 படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் வீட்டில் நிச்சயிக்கும் மாப்பிள்ளையைதான் மணப்பேன். இப்போது நடிப்பில்தான் கவனம்.
+

சிம்பு - ஹன்சிகாவிற்கு இடையில் புகுந்த சிவகார்த்திகேயன்...!


கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக அறிவித்திருந்தனர். அன்றிலிருந்து அவர்களது திருமணம் குறித்துப் பேச்சுக்கள் எழுந்துவந்தன.

சிம்பு - ஹன்சிகா காதல் விவகாரம் ஹன்சிகாவின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுவந்தது.

 பின்னர் சிம்புவின் முன்னாள்
காதலியான நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிப்பது குறித்து ஹன்சிகா அதிருப்தியில் இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளை இருவரும் மறுத்துவந்தனர்.

ஆனால் கடந்த சில வாரங்களாக சிம்புவும் ஹன்சிகாவும் பிரிந்துவிட்டார்கள் என்று கிசுகிசுக்கள் பரவிவந்தன. இதனையும் இருவரும் மறுத்ததோடு, கடந்த வாரத்தில் கூட சிம்பு ஹன்சிகா தனது காதலி என்றும், நயன்தாரா தோழி என்றும் கூறியிருந்தார்.

இப்படிப் போய்க்கொண்டிருந்த இவர்களது காதலில் இடிவிழுந்ததைப் போல திடீரென்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஹன்சிகாவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும், தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சிம்பு. இதன்மூலம் இத்தனை நாட்களாகப் பரவிவந்த வதந்திகள் உண்மையென்றானது.

ஒரு விசயம் முடிந்துவிட்டால் அதனை அப்படியே விட்டுவிடாமல் அதனைத் தோண்டித் துருவிப் பார்க்கும் இந்த வதந்தியாளர்கள் தற்பொழுது புது வதந்தி ஒன்றையும் பரப்பிவருகிறார்கள்.

அது மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா இணைந்து நடித்ததால்தான் சிம்பு ஹன்சிகாவை விட்டுப் பிரிந்ததற்குக் காரணம் என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது எங்கே போய் முடியுமோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
+

வெற்றிமாறன் ஐ.பி.எஸ் - திரைவிமர்சனம்...!



இயக்குனர்: மேஜர் ரவி

நடிகர்-நடிகைகள்: ஆஷா சரத், முரளிஷர்மா, மோகன்லால்

மும்பையில் மிகப்பெரிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன்லால். இவர், அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் அதிரடி போலீஸ்காரராக வலம் வருகிறார்.

இந்நிலையில், மர்ம கும்பலால் பள்ளிச் சிறுமி கடத்தப்படுகிறாள். அவளை கடத்திய கும்பல் யார் என்பதை விசாரிக்கும் மோகன்லால், அந்த கும்பல் இது போல் பள்ளிச் சிறுமிகளை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலையை செய்து வருவது தெரிகிறது. அதன்படி, கடத்திய சிறுமிகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்புவதும் தெரிகிறது. உடனே, மோகன்லால் அந்த கும்பலை தேடி கேரளாவுக்கு வருகிறார்.

மும்பையில் கடத்தியது போன்றே கேரளாவிலும் சிறுமி ஒருவள் கடத்தப்படுகிறாள். இந்த கடத்தல் வேலைகளை செய்வது யார் என்பதை துப்பறியும் மோகன்லால் இறுதியில் அந்த கும்பலை பிடித்தாரா? சிறுமிகளை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

ஐ.பி.எஸ். அதிகாரியாக மோகன்லால் மிடுக்கான தோற்றத்துடன் வலம் வருகிறார். ஆனால், படத்தில் இவர் ஒரு காட்சியில் கூட போலீஸ் உடை அணிந்திருப்பதை பார்க்க முடியவில்லை. யாரையும் பாரபட்சம் இன்றி அடித்து துவைப்பது, யாருக்கும் மரியாதை கொடுக்காதது என துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கடத்தப்பட்ட தனது மகளை காப்பாற்ற துடிக்கும்போது பாசத்தில் நம்மையும் நெகிழ வைக்கிறார்.

படத்தில் மோகன்லாலுக்கு இணையாக பேசப்படுவர் வில்லன் முரளி சர்மா தான். இவருடைய ஆண்மை இழப்புக்கு மோகன்லால் காரணம் என்பதால் அவரது மகளை பழிவாங்க துடிப்பதும், சோனாவுடம் நெருக்கமாக இருக்கும் காட்சியில் தன்னால் அந்த சுகத்தை அனுபவிக்க முடியவில்லையே என எண்ணி அழுவதுமாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இறுதிக்காட்சியில் சிரித்து, சிரித்து மோகன்லாலை அழவைப்பதில் சிகரம் தொடுகிறார்.

மற்றபடி, படத்தில் வரும் மலையாள நடிகர் முகேஷ், சோனா உள்ளிட்ட பலரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கஷ்டப்பட்டு சம்பாதிப்பதில் காட்டும் அக்கறையை, அவர்கள் பாதுகாப்பில் காட்டுவதில்லை என்பதை வலியுறுத்தி படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் மேஜர் ரவிக்கு சலாம் போடலாம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகளை நீளமாக வைத்து விறுவிறுப்பை குறைத்திருக்கிறார். நிறைய இடங்களில் வசனங்கள் புரியவில்லை.

படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஒரு பாடலைத் தவிர வேறு பாடல்கள் இல்லை. ஆரம்ப பாடலும் கேட்கும்படியாக இல்லை. பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஸ்ரீகுமார் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் பளிச்சிட்டாலும், பல இடங்களில் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில் ‘வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.,’ மித வேகம்….
+

தனக்கு 2வது கோவில் கட்டும் ரசிகருக்கு நன்றி தெரிவித்தார்...! குஷ்பு...



 நடிகை குஷ்புவுக்கு மறுபடியும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திவிடுவார்களோ? குஷ்பு கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

 அவர்கள் குஷ்பு மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்த நினைத்த விதம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. அவர்கள் அப்படி என்ன செய்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி நாடு முழுவதும் தீயாக பரவியது.

குஷ்பு நம்ம வீட்டு மகாலஷ்மி நிகழ்ச்சிக்காக தயாரானபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ஊதா கலரு சேலையில் அசத்தலாக இருந்தார்.

குஷ்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, வாவ்... என்னமா இருக்கீங்க... சீக்கிரமா உங்களுக்கு இரண்டாவது கோவில் ரெடி ஆகப் போகுதுன்னு நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்ட இடம் பார்க்க வேண்டும் என்று இன்னொரு ரசிகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த 2 ரசிகர்களின் கருத்திற்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு கோவில் மட்டுமா கட்டப்பட்டது. அவர் பெயரில் தமிழகத்தில் இட்லி விற்பனையும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
+

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்புக்கு மைல் கல்லாக அமைந்த படம்..!



“மூன்று முடிச்சு” குப் பின் பால சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘அவர்கள்’. பலரும் முக்கோணக் காதல் கதையை படமாக எடுப்பார்கள். அதிலிருந்து மாறுபட்டு, நான்கு கோணங்களில் காதலை படம் பிடித்துக் காட்டினார் பால சந்தர். திரைக்கதையை மிகத் திறமையாக அமைத்தார்.

கதையின் நாயகி சுஜாதா, இசைக்கலைஞன் ரவிக்குமாரை (புதுமுகம்) காதலிக்கிறார். அவர் எழுதும் கடிதங்கள் ரவிக்குமாருக்கு போய்ச் சேராததால், ரஜினிகாந்துக்கு கழுத்தை நீட்டுகிறார். ரஜனிகாந்த், ராமநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மனைவியை துன்புறுத்தி மகிழும் ‘சாடிஸ்ட்’ அவர்.

மனைவியை கட்டித் தழுவும் போது கூட, இந்த மாதிரி அணைத்தால் உனக்குப் பிடிக்குமா? உன் பழைய காதலன் உன்னை எப்படி அணைப்பான்? என்று. வார்த்தைகளால் தேள் போல கொட்டுவார்.

இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. குழந்தையுடன் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார் சுஜாதா.
அங்கு கமலஹாசன் (கதாபாத்திரத்தின் பெயர் ஜானி) வேலை பார்க்கிறார். மனைவியை இழந்தவர். எல்லோருக்கும் உதவி செய்யும் நல்லவர். அவருக்கு தோழனாக இருப்பது ‘ஜுனியர்’ என்ற பெயருள்ள பேசும் பொம்மை.

அவர், சுஜாதாவுக்கு உதவிகள் செய்கிறார். கமல் வீட்டிலேயே குடியேறுகிறார், சுஜாதா.
சுஜாதாவின் கதையை அறியும் கமல், அவரை மனதுக்குள் நேசிக்கிறார். ஆனால், அது ஒரு தலைக்காதல்.

இந்த சமயத்தில், சுஜாதாவின் பழைய காதலன் ரவிக்குமார் பக்கத்து வீட்டில் வசிப்பது சுஜாதாவுக்குத் தெரிகிறது. இருவரும் சந்தித்துப் பேசும் போது, ரவிக்குமார் நிரபராதி என்பது சுஜாவுக்குத் தெரிகிறது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இந்த சமயத்தில் சுஜாதா வேலை பார்க்கும் கம்பனியின் மனேஜராக மாற்றல் ஆகிவருகிறார் ரஜினி. தான் திருந்திவிட்டதாக கூறி, சுஜாதாவுக்கு பல உதவிகள் செய்கிறார்.

இதனால் சுஜாதாவின் மனம் மாறுகிறது. கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று வேறு பெண்ணை மணக்கிறார், ரவிக்குமார்.

இந்த கல்யாணம் முடிந்து சுஜாதா வீடுதிரும்பும் வேளையில் ஒரு வட இந்தியப் பெண் கைக்குழந்தையுடன் வந்து, தன்னை ராமநாதனின் (ரஜினி) மனைவி என்று கூறுகிறாள்.

இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால், ரஜினி மாறவே இல்லை என்பதை சுஜாதா தெரிந்து கொள்கிறார். ஏன் இப்படி செய்தீர்கள்? என்று சுஜாதா கேட்க நீ மறுமணம் செய்வதை தடுக்கவே அப்படிச் செய்தேன். நீ கதறி அழுவதை பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை! என்கிறார் ரஜினி.

மன உறுதி படைத்த சுஜாதா என்னை அழவைக்க மட்டும் உன்னால் முடியாது என்று கூறிவிட்டு, திருவனந்தபுரத்திற்கு ரயில் ஏறுகிறார்.

கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைக்கிறார், கமல்.

இந்தப் படத்தில் ஆன்டி ஹீரோ வேடத்தில் அற்புதமாக நடித்திருந்தார், ரஜினி.
மலையாளம் கலந்த தமிழிலே பேசி நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் கமல்.
சுஜாதாவும் மிகச்சிறப்பாக நடித்தார்.

தன் மகன், சுஜாதாவை மணந்து அநியாயமாக கைவிட்டதை அறியும் ரஜினியின் தாயார். வேலைக்காரியாக மாறி சுஜாதாவுக்கு உதவுவது அருமையான குணச்சித்திர கதாபாத்திரம்.

மொத்தத்தில் ‘அவர்கள்’ பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு, ரஜினியின் நடிப்புக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. ‘எனக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்த படம் அவர்கள்’ என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
+

இளையராஜாவின் சகோதரர்களை கலக்கிய பாலு, பாரதிராஜா மோதல்..!



நடிப்புத் திறமையை காட்ட நடத்திய நாடகம் பாலு  சினிமாவில் பாட ஆரம்பித்த காலத்தில்தான் பாரதிராஜாவைச் சந்தித்தார். இளையராஜாவை பாலுவிற்கு தெரியும். அந்தக் காலகட்டத்தில் பாரதிராஜாவின் அறிமுகம் பாலுவிற்குக் கிடைத்தது.

பாலு வெளியூர் கச்சேரிகளுக்குப் போகும்போது பாரதிராஜா ஓய்வாக இருந்தால், அவருடன் செல்வது வழக்கம். காரில் பாலு சென்றால், முன் சீட்டில் அவர் பக்கத்தில் அமர்ந்து பாலுவிடம் தனது எதிர்கால சினிமா உலகக் கனவுகளைக் கூறுவது பாரதிராஜாவின் வழக்கம். தான் சினிமா உலகில் சாதனை புரிய வேண்டும் என்ற வெறி அந்தக் காலத்திலேயே பாரதிராஜாவின் உள்ளத்தில் ஒரு தீயாக எரிந்து கொண்டிருந்தது.

ஒரு சமயம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலுவின் கச்சேரி நடைபெற்றது. பாலுவுடன் பாரதிராஜாவும் சென்றிருந்தார். பாரதிராஜா பாலுவின் அறையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ஜடத்தைக் கூட தன்னால் நடிக்க வைக்க முடியும் என்று பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த போதுதான், அந்த விபரீத யோசனை பாலுவுக்குத் தோன்றியது. பாரதிராஜாவிடம் ‘உனக்கு நடிக்கச் சொல்லிதர முடியும் என்ற நம்பிக்கை இருக்கு.

அதையும் ‘டெஸ்ட்’ பண்ணிப் பார்த்து விடுவோம். நானும் நீயும் இப்பொழுது ஒரு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்.

அந்தச் சண்டை உண்மையானதாக மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். அப்படி நம் குழுவில் இருப்பவர்கள் நமது சண்டையை நம்பினால் உண்மையிலேயே உனக்கு நடிக்கிற திறமையிருக்கு உன்னாலும் நடிப்புச் சொல்லித்தர முடியும் என்று ஏத்துக்கிறேன்’ என பாலு கூற உற்சாகமாக பாலுவின் சவாலை ஏற்றார் பாரதிராஜா.

உடனே பாரதிராஜா பாலுவைப் பார்தது ‘நீ என்ன? உன் மனசுக்குள்ள பெரிய முகமது ரபின்னு நினைப்போ? நாலு சினிமாவில் பாடினதுக்கே இவ்வளவு கொழுப்பா?’ என்று கேட்க அதற்கு பாலு ‘நானாவது நாலு படத்தில் பாடியிருக்கேன். சினிமாவுக்குள்ள நுழையாமலே உனக்கு பெரிய சாந்தாராம் என்ற நினைப்பா?’ என்று கேட்க வார்த்தைகள் பின்னி சிறிய வாக்குவாதம் பெரிய சண்டையாக உருவெடுத்தது.

இவர்கள் சண்டை போட்டுக் கொண்டு ரூமை விட்டு வெளியே வர இவர்களின் குரலைக்கேட்டு இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர், கங்கை அமரன், மற்றும் இசைக்குழுவினர் வெளியே வர, பாரதிராஜாவும், பாலுவும் சண்டை போடுவது ஒரு பெரிய குழப்பத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் பாலுவும், பாரதிராஜாவும் கை கலக்கும் அளவிற்குப் போய்விட்டவுடன், பாஸ்கரும் அமரனும் இருவரையும் பிரித்துவிட்டார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த பாரதிராஜாவுடன் பாலு சண்டை போட்டது பாஸ்கருக்குப் பிடிக்கவில்ல.

அதே நேரத்தில் சாதுவான பாலுவிற்குப் கோபம் வரும்படி பாரதிராஜா நடந்துகொண்டது அமரனுக்குப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் ஒற்றுமையான குழுவின் இடையே இப்படியொரு பிளவு ஏற்பட்டதை யாராலும் தாங்க முடியவில்லை.

 ஒரு மாதிரியாக சண்டை ஓய்ந்து, பாலுவும் பாரதிராஜாவும் நடித்ததாகக் கூற இவர்கள் சண்டையைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பாஸ்கரும், கங்கை அமரனும் கோபம் தாங்காமல், பாலுவையும் பாரதிராஜாவையும் அடிக்கவே வந்து விட்டனர்.
+

குத்துப்பாட்டா ஆளவிடுங்கடா சாமி..!



ரேணிகுண்டா, ரகளபுரம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். பஞ்சாபி நடிகையான இவர், இப்போது தமிழில், மீகாமன் வெயிலோடு விளையாடு விஞ்ஞானி, யாருக்குக் தெரியும்?,  மயங்கினேன் தயங்கினேன், ரெண்டாவது படம், அமளி துமளி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:

ஜெயம்ரவியுடன் நடிக்கும் தனியொருவன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். விஞ்ஞானி சயின்ஸ் பிக்ஷன் படம். மீரா ஜாஸ்மின் ஹீரோயின். நான் 2 வது கதாநாயகி. இந்தப் படத்துக்காக சமீபத்தில் பாங்காக் போய் வந்தேன். தண்ணீருக்கு அடியில் எடுத்த காட்சி ஒன்றில் ரிஸ்க் எடுத்து நடித்தேன்.

குத்துப் பாடலில் ஆடுவது பற்றிக் கேட்கிறார்கள். முன்பு ஆடினேன். இரண்டு மூன்று படங்களில்தான் ஆடியிருப்பேன். ஆனாலும் எனக்கு அது பிடிக்கவில்லை. கதாநாயகியாக ஆசை. குறைந்தபட்சம் இரண்டாவது கதாநாயகி வேடமாவது வேண்டும் என்பதால் அதை விட்டுவிட்டேன். இவ்வாறு சஞ்சனா சிங் கூறினார்.
+

கூகுள் உள்ளிட்ட தளத்திலுள்ள 125 கோடி பேரின் அக்கவுன்ட் அபேஸ்..!



கூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன.கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது.

எனவே, நாம் இதில் பதிந்து வைக்கப்படும் பைல்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் சேவ் செய்யப்பட்டு, நம் தேவையின் போது தரப்படுகின்றன. சரி, இவை என்றென்றும் பாதுகாப்பாக இருக்குமா?என்று அவ்வப்போது கேள்விகள் எழுந்த நிலையிலும் இன்றைக்கு நம்முடைய பல முக்கிய தகவல்கள், பேங்க் விவரங்கள், மற்றும் பல தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இந்த மெயிலில் தான் வைத்திருக்கிறார்கள்.அப்படி வைத்திருப்பவர்களுக்கு தற்போது ஒரு திடுக் செய்தி வந்துள்ளது.அதாவது நேற்று இரவு நடந்த சைபர் அட்டாக்கில் உலகம் முழுவதிலும் இருந்து 125 கோடி நபர்களின் தனி நபர் விவரங்கள் திருடப்பட்டிருக்கிறதாம்.

தற்போது பல்வேறு நாடுகளில் இருந்து வரும் 10 தவறான இ-மெயிலில் (ஸ்பேம்) ஒன்று இந்தியாவில் இருந்து வருகிறது. சைபர் குற்றங்கள் தடுப்பதில் ஒரு நாட்டினரால் மட்டும் முடியாது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து தான் குற்றங்களை தடுக்க முடியும். உலகம் முழுதும் உள்ள 50,000 கம்பெனிகளில் தினமும் சைபர் அட்டாக் நடந்து வருகிறது.அதே சமயம் கூகுள், மைக்ரோசாப்ட், யாஹூ இப்படி பல பெரிய நிறுவனங்களையே குறி வைத்து ஹேக்கர்கள் இது மாதிரி அட்டாக்கை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில்தான் நேற்று இரவு நடந்த சைபர் அட்டாக்கில் உலகம் முழுவதிலும் இருந்து 125 கோடி நபர்களின் தனி நபர் விவரங்கள் திருடப்பட்டிருக்கிறது என்றும் அதிலும் இந்த மேட்டரே இன்று தான் கூகுளுக்கு தெரியும் என்பதால் இது குறித்து இப்போது தான் எத்தனை பேர் திருடப் பட்டுள்ளது என்று கணக்கு எடுத்து கொண்டிருக்கிறதாம்.
+

போலிகளைத் தவிர்க்க திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு..!



இந்தியாவில் புவிசார் குறியீட்டு சட்டம் 1999-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன் விதிகள் 2002-ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டு, 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன.புவிசார் குறியீடு என்பது ஒரு புவியியல் சார்ந்து உற்பத்தி செய்யும் பொருளை மற்றவர்கள் உரிமை கொள்ளக் கூடாது.அதே பெயரை பயன்படுத்தக் கூடாது. அந்தப் பெயரைக் கொண்டு போலியாக பொருள்களை உற்பத்தி செய்யக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். உதாரணத்துக்கு காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்கடி சேலை உள்பட பல பொருள்களைக் குறிப்பிடலாம். இதில் பதிவு செய்த பொருள்கள் பெயரில் வேறு யாரும் உற்பத்தி செய்தால் சட்டப்படி அது தவறாகும்.

இந்த புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு உறுதி வரை 193 பொருள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 128 பொருள்கள் கைத்தறி பொருள்கள் சார்ந்தவை. இந்தப் பொருள்கள் புவிசார் குறியீடின் கீழ் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பொருள்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.ஆனால், வெளிநாட்டு மதுபானவகைகளுக்கு இந்தியாவில் புவிசார் குறியீடின் கீழ் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. மதுபான வகைகளுக்கு புவிசார் குறியீடின் கூடுதல் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு, இந்தியப் பொருள்களுக்கு உரிய கூடுதல் பாதுகாப்பு இதுவரை வழங்கவில்லை.இதையொட்டி சென்னை ஹைகோர்ட்டில் ஒரு வழக்குக் கூட நிலுவையிலுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோவிலி்ல தயாரித்து பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவிற்க ஜி.ஐ எனப்படும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் மட்டுமே கிடைக்கும் லட்டு பிரசாதம் பிற இடங்களில் திருப்பதி லட்டு என்ற பெயரில் தயார் செய்யப் பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் தேவஸ்தானத்திற்கு ஆதரவாக அளித்த தீர்ப்பில் புவிசார் குறியீடு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில் பழங்காலம் முதலே தென் மாவட்ட தாய்க்குலங்களின் கைப்பக்குவத்தில் உருவான, அதிரசம், தட்டை, முந்திரிக் கொத்து, சீடை, சுசியம், அப்பம்… போன்ற உணவுப் பண்டங்கள் வரிசையில், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் ஆகியவை உலகப் புகழ் பெற்றுள்ளன.அவற்றுக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியும் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்க்து.
+

தமிழ் பொண்ணுக்கு சான்ஸ் கொடுங்க சார்..!



புதுமுகம் ஸ்ரீபிரியங்காவுக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி. அகடம் என்ற கின்னஸ் சாதனை படத்தில் பேயாக அறிமுகமானவர். இப்போது கங்காறு படத்தில் ஹீரோயின்.

 முள்ளும் மலரும், பாசமலர் மாதிரி அண்ணன்-தங்கை பாசக் கதையாம். அதில் ஸ்ரீப்ரியங்கா தங்கையாக நடிக்கிறார். "நான் பக்கா தமிழ் பொண்ணு எனக்கு நிறைய சான்ஸ் கொடுங்க" என்கிறார் ஸ்ரீப்ரியங்கா.

அவர் மேலும் கூறியதாவது: "தமிழ் பொண்ணுங்க நடிக்க வரத் தயங்குறாங்கன்னு எல்லாரும் சொல்றாங்க. நான் எங்க அப்பா அம்மாவ கன்வீன்ஸ் பண்ணி தைரியமா நடிக்க வந்திருக்கேன். எனக்கு நிறைய சான்ஸ் தருவாங்கன்னு நம்புறேன்.

 கங்காரு படத்தில் தங்கை கேரக்டரா இருந்தாலும் நான்தான் ஹீரோயின். இதை ஏன் சொல்றேன்னா இங்க ஒரு படத்துல தங்கச்சியா நடிச்சிட்டா அடுத்த படத்துக்கும் தங்கச்சியாத்தான் நடிக்க கூப்பிடுவாங்களாம். ஆனா நான் ஹீரோயினாத்தான் நடிப்பேன். அப்பதான் ஹீரோகூட டூயட்டெல்லாம் பாட முடியும், ஸ்ரீதேவி மேடத்தை பார்த்து நடிக்க வந்தேன். சூர்யா சார்கூட நடிக்கிற அளவுக்கு வளரணும்.

சாமி சார் இயக்கத்துல நடிக்க போறியே அவர் பட்டுன்னு அடிச்சிடுவார்னு சொன்னாங்க. எனக்கு அப்படி எதுவும் நடக்கல. கடவுளுக்கு நன்றி. மற்றவங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்டார்னு எனக்குத் தெரியாது என்கிட்ட நல்லபடி நடந்துக்கிட்டாரு.

நான் ரொம்ப சின்னப்பொண்ணு இப்பதான் பிளஸ் டூ முடிச்சேன். கொஞ்சம் மெச்சூர் வந்ததும் கிளாமரா நடிக்கிறேன். அதுவரைக்கும் ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி அடக்க ஒடுக்கமா நடிக்க முடிவு பண்ணியிருக்கேன்" என்கிறார் ஸ்ரீப்ரியங்கா.
+

ஸ்ருதிஹாசனுக்கு போட்டியாக சாண்ட்ரா எமி..!



பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் அத்தனை பேருக்குமே முதல் படத்தில் நல்லதொரு டீசன்டான வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட படங்களில் நடித்த பிறகுதான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துவார்கள்.

குறிப்பாக, விலைமாது வேடங்களில் நடிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள். அந்த வகையில், தற்போதைய தமிழ் நடிகைகளில் அனுஷ்கா, சங்கீதா, ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் விலைமாதுவாக நடித்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது சாண்ட்ரா எமி என்ற புதுமுக நடிகையும் இணைந்துள்ளார். சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தில் விலைமாதுவாகத்தான் அவர் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார்.

இதுபற்றி சாண்ட்ரா எமி கூறுகையில், இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் என்னை கேட்கவில்லை. இப்படியொரு கதை என்று சொன்னவர்கள் அதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலணை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நான்தான், நான் நடிக்கிறேன் எனறு சொன்னேன். அப்போது, விலைமாது வேடம் ஒன்றும் ஆட்சேபனை இல்லையே என்று கேட்டார்கள்.

அதற்கு, இது ஒரு நல்ல வேடம். குறிப்பாக, சோசியல் சர்வீஸ் செய்கிற மாதிரியான வேடம் இது. அதனால் இதில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று சொன்னேன். மேலும், இப்படத்தில் ஆபாசமாக காட்சிகள் எதுவும் இல்லை. என்னையும் அசிங்கமாக காட்டவிலலை.

 சமுதாய நலன் கருதும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், என்னை நல்லவிதமாகவே காண்பித்திருக்கிறார்கள் என்று சொல்லும் சாண்ட்ரா எமி, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக பல நாட்களாக ஹோம் ஒர்க் செய்தாராம். அதோடு, இயக்குனர் கொடுத்த ஆராய்ச்சி புத்தகத்தையும் படித்து உள் வாங்கிக்கொண்டே கேமரா முன்பு வந்ததாகவும் சொல்கிறார்.
+

விஜய்யின் ஜில்லா படம் 50–வது நாள் வெற்றி விழா..-உண்மைதானா..?



விஜய், காஜல்அகர்வால் ஜோடியாக நடித்த ‘ஜில்லா’ படத்தின் 50–வது நாள் வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது.

சென்னையில் ‘ஜில்லா’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்பு வழங்கினார்கள்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஆனந்த், சோகன், சண்முகம், சுரேந்தர், விக்கி, முனியா, ரமேஷ் கலந்து கொண்டனர். பட்டாபிராமில் வினோத் நோட்டு புத்தகம் வழங்கினார். அயப்பாக்கத்தில் ராஜேஷ், சசி வேட்டி, சேலை வழங்கினர். மாதவரத்தில் மூர்த்தி, முருகன் ஆகியோர் ‘கேக்’ வெட்டினர்.

காஞ்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன் தலைமையில் தாம்பரம் பார்க் கோவிலில் சிறப்பு பூஜை செய்து காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தாம்பரம் டி.ரமேஷ் ஏழைகளுக்கு உதவி பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார். நிர்வாகிகள் சரத், ரமேஷ், கே.விஜய் கலந்து கொண்டனர்.
+

விஜய் சேதுபதிலாம் எனக்கு சான்ஸ் வாங்கித்தரல - ஐஸ்வர்யா..!



கோலிவுட்டின் சமீபகாலக் கிசுகிசுவாகப் பேசப்பட்டுவரும் செய்திகளில் முக்கியமானது விஜய் சேதுபதியின் சிபாரிசின் பேரில் நடிகை ஐஸ்வர்யாவுக்கு நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுவருவதாகக் கிளம்பியிருக்கும் வதந்திகளே. ஆனால் இதனை ஐஸ்வர்யா மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபமாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அட்டக்கத்தி திரைப்படத்தில் தான் நடித்ததன் மூலமே தனக்கு ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் கிடைத்ததென்று கூறியுள்ளார். மேலும் தான் இந்தப் படங்களில் நடித்ததற்கும், விஜய் சேதுபதி இந்த வாய்ப்புக்களுக்குப் பின்னணியில் உள்ளார் என்ற கிசுகிசுக்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளாராம்.

ஐஸ்வர்யா தற்பொழுது அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகிவரும் திருடன் போலீஸ் படத்திலும், தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்துவரும் காக்கா முட்டை படத்திலும் நடித்துவருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாடா நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+

தமிழ் சினிமாவில் தமிழ் தெரிந்தவர்களுக்கு என்றுமே - நோ ச்சான்ஸ் ஒன்லி..!



ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் மெலிசா. இவர் மகா மகா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் மதிவாணன் ஹீரோவாக நடித்து படத்தை இயக்குகிறார்.

 இளையராஜா அண்ணன் வரதராஜனின் மகன் பாவலர் சிவா இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தின் பாடல்களை கேட்ட இளையராஜா, சிவாவுக்கு பாராட்டு தெரிவித்தார். வேலை விஷயமாக ஆஸ்திரேலியா செல்லும் இளைஞன், அங்கு ஒரு பெண்ணை காதலிக்கிறான். திடீரென அவள் காணாமல் போகிறாள்.

அதிர்ச்சி அடையும் காதலன் தனது தோழியுடன் சேர்ந்து காதலியை ஆஸ்திரேலியா முழுவதும் தேடுகிறான். த்ரில்லர் படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் முழுவதும் ஆஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் கடற்கரை பகுதிகளில் நடந்துள்ளது.

 பிரேம் ஒளிப்பதிவு. இதில் நிழல்கள் ரவி, அனுபமா குமார் மற்றும் ஆஸ்திரேலிய நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளனர்.
+

பணக்காரர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன வித்தியாசம்..?



இந்த உலகத்தில் பணக்காரராக மாற வேண்டும் என்று ஆசை படாதவர் யாரேனும் இருக்க முடியுமா? வெகு சிலரை தவிர, அனைவருக்கும் இந்த ஆசை இருக்கத் தான் செய்கிறது. பணக்காரராக மாறுவதற்கும் அந்த அந்தஸ்தை நிலை நிறுத்துவதற்கும் சில தகுதிகள் இருக்கிறது. அது தெரியாததால் தான் பலராலும் பணக்காரராக முடிவதில்லை. பணக்காரராக கடும் உழைப்பும், தெளிவான அறிவு மட்டும் போதாது. வேறு என்ன வேண்டும் என்று தானே கதைக்கிறீங்க..

ஒரு கோடீஸ்வரன் மற்றவர்களிடமிருந்து எவ்வாறு மாறுபடுகிறான்? அது அவர்களின் நிகர சொத்து மதிப்பில் உள்ள பூஜியங்கள் மட்டுமா அல்லது அவர்களின் சிந்தனை, மனப்பான்மை மற்றும் முற்றுணிபு போன்றவைகளாலும் தீர்மானிக்கப்படுகிறதா? மற்றவர்கள் மத்தியில் ஒரு பெரும் பணக்காரரின் குணாதிசயங்கள் தனித்துவமானதாக இருக்கும். அப்படி என்ன குணாதிசயங்கள்?? இதை பின்பற்றினால் நாமும் பணக்காரராக மாறலாம்.

நீங்கள் உங்களை தன்னம்பிக்கை நிறைந்தவராக கூறிக் கொள்ளலாம், ஆனால் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு கூட சில காலங்களில் தன் ஆற்றல்கள் மீது ஐயங்கள் எழும். அதனை தடுக்க இயலாவிட்டாலும் கூட, சுய ஐயங்களை கடந்து செல்ல சில வினைமுறைத் திறன்களை வகுக்கலாம். வசதி மற்றும் வெற்றியின் மீதான ஐயங்களை கோடீஸ்வரர்கள் மூட்டை கட்டி விட்டு, அவர்களின் இலக்கை நோக்கியே பயணிப்பார்கள். Show Thumbnail

பணக்காரர்கள் உறுதியான தெளிவான இலக்குகளை நிர்ணயித்து கொள்வார்கள். பின் அந்த இலக்கை போதிய காலத்திற்குள் அடைய, ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் தொடர்ச்சியாக பாடு படுவார்கள். ஆனால் நாம் இலக்கை மட்டுமே நிர்ணயித்து கொண்டு, அதை மறந்தே போகிறவர்கள், பெரிதாக சாதிக்க போகும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

பணக்காரர்கள், அடுத்த கட்ட காரியங்களை எடுப்பதற்கு முன்பும், பிறருக்கு உதவுவதற்கு முன்பும், தங்களின் வேலைகளை முதலில் முடிப்பார்கள். தங்கள் அட்டவணையை சரியாக பின்பற்றி, பிறர் கூறுவதை பற்றி கவலை கொள்ளாமல், இலக்கை அடைய சோர்வடையாமல், கடினமாக வேலை செய்வார்கள். சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பை மீறி, தங்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, கல்லூரி படிப்பை துறந்த மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களை எப்படி நாம் மறக்க முடியும்.

இவ்வுலகில் மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் - நினைத்தை நடக்க வைப்பவர்கள்; நினைத்தது நடக்க காத்திருப்பவர்கள்; 'என்ன நடந்தது' என்று எப்போதுமே கேட்பவர்கள். பணக்காரர்கள் இதில், முதல் ரகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் எப்போதுமே தொடக்க முயற்சிகளை எடுத்து அதனை சாதிப்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல், தனியொரு ஆளாக, நடக்கும் அனைத்தையும் சமாளித்து, மனதுக்கு சரியென பட்டதை செய்வார்கள்.

பணக்காரர்கள் எதையுமே அரை குறையாக விடுவதில்லை - அது சொந்த உறவுகளாகட்டும் அல்லது தொழில் ரீதியான விஷயமாகட்டும். எந்த ஒரு செய்திட்டத்தையும் முடிக்காமல் விட மாட்டார்கள். அதே போல் அவர்களின் பில் தொகைகளையும் கட்டாமல் இருக்க மாட்டார்கள். வேலைகளை தள்ளி கொண்டே சென்றால் உங்கள் ஆற்றலுக்கு அது முட்டுக்கட்டை போட்டு, உங்கள் சிந்தனைகளை சிதற விடும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரிவதால், சாமர்த்தியமாக நடந்து கொள்வார்கள்.

அவர்களுக்கென சில இலக்குகள் இருப்பதால், அதற்கு இடையூறாக இருக்கும் விஷயங்களுக்கு எப்போது, எப்படி 'வேண்டாம்' என்று சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். நீங்கள் எந்தளவுக்கு வசதியாக இருக்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்களை அனைத்திலும் உட்படுத்த பலரும் முயல்வார்கள் என்பது தெளிவான ஒன்றே. ஆனால் மறுக்கும் கலையை ஒருவன் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அவன் சீக்கிரத்திலேயே பிரச்சனையில் சிக்கிக் கொள்வான்.

பணக்காரர்கள் அவர்கள் விரும்பியதையே செய்வார்கள். அதற்கு காரணம் அதில் கிடைக்கும் சுதந்திரம் மட்டுமல்லாது விரும்பி செய்யும் எந்த வேலையானாலும் நன்மையையே ஈட்டி தரும் என்பது அவர்களுக்கு தெரியும். சாதாரண மக்களுக்கு வேலை பிடிக்கவில்லை என்றாலும் கூட, பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் அதனை செய்வார்கள். ஆனால் பணக்கார்கள் அப்படி யோசிப்பதில்லை.

எல்லோரும் சொல்வதை போல், சொத்தை இழந்தால் ஏதோ ஒன்றை தான் இழப்போம்; ஆனால் உடல்நலத்தை இழந்தால், அனைத்தையும் இழந்ததை போலாகும். பணக்காரர்கள் பல நேரங்களில் சிக்கனமாக இருந்தாலும் கூட, ஆரோக்கியத்தை பெறுவதற்கும், நல்ல கல்வியையை பெறுவதற்கும் முதலீடு செய்ய தயங்குவதில்லை. இந்த முதலீடு அவர்களை பணக்காரர்களாக மாற்றும். எப்படி என்று தெரிய வேண்டுமா?

மிகவும் சுலபம்; ஆரோக்கியத்தையும் நல்ல கல்வியையும் பெற்றிருந்தால், அவர்களால் புது தொழிலை ஆரம்பித்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட முடியும். வியாபாரம் வெற்றியடைய வேண்டுமானால், தொழிலில் ஈட்டிய லாபத்தை மீண்டும் அதில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வகை முதலீடு உங்களை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடனும் வைத்திருக்கும்.

பணக்காரர்கள் வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குடும்பத்திற்கும் கொடுக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவதையும் சமுதாயத்தோடு ஈடுபடுவதையும் அவர்கள் தவிர்ப்பதில்லை. பணக்காரர்களில் 97% மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் வாழ்க்கையை அணுகும் முறையையும் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று பாஸ்டன் கல்லூரியை சேர்ந்த பால் ஜி. செர்விஷ் மற்றும் ஜான் ஜே. ஹாவென்ஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது.

மனிதனின் மனப்பான்மை இரண்டு வகைப்படும் - நல்ல மனப்பான்மை மற்றும் கெட்ட மனப்பான்மை. நல்ல மனப்பான்மை எப்போதும் உங்களை வருங்கால வெற்றியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். நல்ல மனப்பான்மை இருக்கும் போது, உங்கள் பிரச்னையை தீர்க்க அதிசயம் நடக்கும் என்று காத்திருக்காமல், நல்ல தீர்வை நீங்களே காண்பீர்கள். ஒரு பணக்காரன் இதையே செய்வான். அவர்களின் பேச்சும் செயலும், மோசமான சூழ்நிலைகளிலும் கூட, வெற்றியை ஈட்டும் மனப்பான்மையையே பிரதிபலிக்கும்.

மக்கள் மத்தியில் வணிகம் செய்யப்படும் முதலீடுகள் வேகமாக பரவுவதால், அதனை பற்றிய தகவல்களை சுலபமாக அடையலாம். இந்த தகவல்களை பல முதலீட்டாளர்களும் நிதி துறை சார்ந்தவர்களும் படித்து, இதன் அடிப்படையில் பங்கு விலையை நிலைநாட்டுகிறார்கள். பணக்காரர்கள் இந்த ஊகத்துக்கு முரண்பாடாக நடக்க மாட்டார்கள். அதனால் முதலீடு செய்யும் போது, வருங்காலத்தை கணிக்க மாட்டார்கள். பணக்காரர்கள் எப்போதுமே இடர்பாட்டை குறைக்க விரும்புவார்கள். அப்படி செய்து, பல பிரிவுகளுக்கு கீழ் சந்தை ஈட்டு தொகையை அதிகரிக்க விரும்புவார்கள். ஆனால் சாதாரண மக்களோ, வருங்காலத்தை கணித்து, குறிப்பிட்ட பங்கில் முதலீடு செய்து, தவரிழைப்பார்கள்.

+

உலகில் உள்ள விசித்திரமான ஆல்கஹால்கள்..!

ஆல்கஹால் என்றதும் அனைவரும் நினைவுக்கு வருவது ஒயின், பீர், விஸ்கி, வோட்கா, ரம் போன்றவை தான். இதில் ஒயின் திராட்சையால் செய்யப்படும் ஒரு பானம்.

இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று தெரியும். ஆனால் இந்த ஒயினில் பல வெரைட்டிகள் உள்ளன. அவைகளின் பெயர்களை கேட்டாலே அசந்துவிடுவீர்கள். ஏன் சிலருக்கு அருவெறுப்பு கூட ஏற்படும்.

அதுமட்டுமின்றி, விஸ்கி, வோட்கா, பீர் போன்றவற்றை கூட விசித்திரமாக தயாரித்து சாப்பிடுகிறார்கள். இப்போது அப்படி உலகில் உள்ள விசித்திரமான சில ஆல்கஹால்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முடிந்தால் அவற்றை ட்ரை செய்து பாருங்கள்...

பாம்பு ஒயின் (Snake Wine)


 உலகிலேயே இந்த ஒயின் மிகவும் சிறந்த பானமாக கருதப்படுகிறது. இது நச்சுத்தன்மையுடைய நாகப்பாம்பை மூன்று மாதமாக நீரில் போட்டு பதப்படுத்தி வைத்து, பின் அதனை குடிப்பார்கள். இதனைக் குடித்தால், வாதநோய் குணமாவதோடு, செக்ஸில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக இந்த ஒயின் சீனாவில் அதிகம் கிடைக்கும்.

தேள் விஸ்கி (Scorpion whiskey) 


இந்த விசித்திரமான பானமானது கருந்தேளை, ஜின்செங் வேர் மற்றும் சில மூலிகைகளின் விதைகள் ஆகியவற்றை விஸ்கியில் ஊற வைத்து செய்யப்படுவதாகும். இந்த தேள் விஸ்கியானது இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் தசை வலிகளுக்கும் சிறந்தது.

எலி ஒயின் (Mouse Wine)


 சீனாவில் கிடைக்கும் இந்த எலி ஒயின், பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. இது சில சீன மூலிகைகள், வேர்கள் மற்றும் எலிக் குட்டி ஆகியவற்றை நீரில் போட்டு மூன்று வருடங்கள் ஊற வைத்து செய்யப்படுவதாகும். முக்கியமாக இந்த எலி ஒயின் ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்சனைக்கு சிறந்தது.

அணில் பீர் (Squirrel beer)


 அணில் பீர் தான் உலகிலேயே மிகவும் ஸ்ட்ராங்கான பீர். இதனை ஒரு சிப் குடித்தாலே, போதை தலைக்கு ஏறிவிடும். அதற்கேற்றாற் போல் இதன் விலை மிகவும் அதிகமானது.

பேகன் வோட்கா (Bacon Vodka)


எந்த இறைச்சியானாலும் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டும் தான் இந்த பேகன் வோட்காவை குடிக்க முடியும். ஏனெனில் சமைத்த பன்றி இறைச்சியை வோட்காவில் சேர்த்து செய்யப்படுவதாகும். மேலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த பானம் மிளகு மற்றும் வேக வைத்த பன்றியின் வாசனையோடு இருக்கும்.

பல்லி ஆல்கஹால் (Three Lizard Liquor) 


உலகிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் ஆல்கஹாலை சுவைக்க நினைத்தால், அதற்கு பல்லி ஆல்கஹால் தான். இந்த ஆல்கஹாலில் மூன்று பல்லியை ஊற வைத்து செய்வார்கள். இது மிகவும் விலை அதிகமானது. இதனை ஒரு சிப் குடித்தாலே, உடலில் எனர்ஜி அளவுக்கு அதிகமாகவிடும்.

கடற்பறவை ஒயின் (Seagull Wine)

 இந்த ஒயினானது இறந்த கடற்பறவையை தண்ணீரில் போட்டு பதப்படுத்தி செய்யப்படுவதாகும். இதுவும் உலகில் உள்ள மக்களால் விரும்பி பருகப்படும் ஒயின்களுள் ஒன்றாகும்.

+

''அமரா'' - திரை விமர்சனம்…!



கிராமத்தில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களோடு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார் நாயகன் அமரன். இப்படி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதை தாயார் கண்டித்தும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் தன் நண்பர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஊருக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகிறார் அமரன். ஆனால், அவரது நண்பரோ, வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிவரும் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் என்று கூறி அவரை விட்டுச் செல்கிறார்.

இதனால் மனமுடைந்து போன அமரன், வேலைக்குச் செல்ல முடிவெடுத்து மதுரையில் காய்கறி கடை நடத்திவரும் தன் அத்தையிடம் வேலைக்குச் செல்கிறார். ஒருநாள் இவர் மார்க்கெட்டில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவர் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் செல்கிறார். பணத்தை தராமல் சென்றது போலீஸ்காரர் என்று தெரியாமல் அவரிடம் சண்டை போடுகிறார்.

அதை தடுக்க வந்த போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார் அமரன்.போலீஸூடன் சண்டை போட்டதால் அமரனின் அத்தை, அவரை ரெயிலில் சென்னைக்கு அனுப்பி விடுகிறார். ரெயிலில் அமரனை சந்தித்த நாயகி சோனு, அவருடனே ஒட்டிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ரெயிலை தவற விடுகின்றனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிக்கை ஒன்றில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்றதாக செய்தி வருகிறது. இதை அறியும் சோனுவின் தந்தையான ஆஷிஷ் வித்யார்த்தி, இவர்களை கொல்ல திட்டம் தீட்டுகிறார்.

மறுநாள் விடிந்த பிறகு சோனு, அமரனிடம் நீ யார்? என்னை எதற்கு கடத்தினாய்? என்று சத்தம் போடுகிறார். அமரன் நடந்ததையெல்லாம் சோனுவிடம் விவரிக்கிறார். இதற்கு சோனு, நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன். இதற்கு சம்மதித்த என் தந்தையை சந்திக்க காதலனை அழைத்துக்கொண்டு நான் ஊருக்கு ரெயில் சென்று கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து விட்டார்கள் என்று கூறுகிறார். எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் காதலனையும் காணவில்லை என்று கூறி புலம்புகிறாள். காதலனை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு அமரனை கேட்கிறாள்.

அமரனும், சோனுவும் காதலனை தேடி அவரது வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு தன் அப்பா ஆஷிஷ் வித்யார்த்தி காதலனை கொன்றுவிட்டதாகவும், தன்னையும் கொல்ல தேடி வருகிறார் என்பதையும் அறிகிறார் சோனு.இறுதியில் அமரனும், சோனுவும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது போலீஸ் அதிகாரியான சம்பத்திடம் சிக்கினார்களா? காதலிக்காத இவர்கள் இரண்டுபேரும் காதலித்தார்களா? என்பதே மீதிக்கதை.

அமராவாக நடித்திருக்கும் அமரன், நடனம், சண்டை, காதல் என அனைத்திலும் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகி சோனுவுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். வில்லனாக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சம்பத் ஆகியோர் அவர்களுக்கே உள்ள பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
டி.இமான் இசையில் பாடல்களை ரசிக்கலாம். ராஜா முகமது ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. இயக்குனர் ஜீவன் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘அமரா’ பார்க்கலாம்….
+

''ஓடு ஓடு ஓடு...'' என்று. இதை ஓப்பனிங் சாங்காப் போட்டிருந்தா அப்பவே ஓடியிருப்போமே...!


நீங்க, உங்களோடு சில நண்பர்கள், நட்புக்காகத் தியாகங்கள் பண்றீங்க...'' - இப்படிக் கதை சொன்னாலே சசிகுமார் ஓகே சொல்லிவிடுவார். அவருக்கு ஓகே. நமக்கு? 'பிரம்மன்’ படத்துக் கதையைச் சொல்றேன். கவனமாக் கேளுங்க!

 கோவையில் 'மாடர்ன் தியேட்டர்’னு ஒரு பாடாவதி தியேட்டரை லீஸுக்கு எடுத்துப் படம் ஓட்டுகிறார் சசிகுமார். அவருக்கு ஒரு நண்பன் இருக்கணுமே. 'நண்பேன்டா’ சந்தானம். ஓட்டுவது எல்லாம் செகண்ட் ரிலீஸ் படங்கள் என்பதால் கூட்டமே வருவது இல்லை. எல்லாப் படங்களையும் போல அப்பா ஞானசம்பந்தன் 'உதாவக்கரை’ என்று மகனைத் திட்டுகிறார்.

 தியேட்டருக்கு கமர்ஷியல் டாக்ஸ் கட்டாததால் கெடு விதித்து, நோட்டீஸும் ஒட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் காதலியை மணக்க வேண்டும் என்றால், இந்தப் பாடாவதி தியேட்டரைத் தலைமுழுகிவிட்டு வேறு ஏதாவது உருப்படியான வேலை பார்க்க வேண்டும் என்ற நிர்பந்தம்.

ஆனாலும் தியேட்டரைக் கைவிட மறுக்கிறார் சசிகுமார். உருப்படவே மாட்டேன் என்று அவர் தலைகீழாய்த் தண்ணி குடிக்கிறார். ஏன்? இங்கே தொடங்குது ட்விஸ்ட். அதுக்கப்புறம் படத்தோட இரண்டாம் பாதி முழுக்க ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்டுகள்.

முதல் ட்விஸ்ட் சந்தானத்தைப் போலவே சின்ன வயதில் சசிகுமாருக்கு இன்னொரு நண்பன் இருக்கிறார். இரண்டு பேருக்கும் அப்படி ஒரு சினிமா தாகம். கீழே கிடக்கும் ஃபிலிம் துண்டுகளை எடுத்து, அவர்களே படம் ஓட்டிப் பார்க்கிறார்கள். ஸ்கூலை கட் அடித்துவிட்டுப் படம் பார்த்து வீட்டில் மாட்டுகிறார்கள்.

 சசிகுமாரின் நண்பன் மதன்குமாரின் கலை தாகத்தைப் புரிந்துகொண்ட அவரது அப்பா, ''சசிகுமாரிடம் பேசக் கூடாது'' என்று சத்தியம் வாங்கிவிட்டுச் சொல்கிறார், ''நீ இந்த ஊரில் இருந்தா டைரக்டர் ஆக முடியாது. டவுன் ஸ்கூலில் படிச்சாதான் டைரக்டர் ஆக முடியும்'' என்று. (அதுக்குள்ளே முறைச்சா எப்படி?). அதேபோல் வளர்ந்து தெலுங்கில் மூணு ஹிட் கொடுத்து பெரிய டைரக்டர் ஆகிவிடுகிறார் நண்பன் மதன்குமார்.

 ஐந்து லட்சம் கமர்ஷியல் டாக்ஸ் கட்டினால்தான் தியேட்டரை மீட்க முடியும் என்ற நிலையில் சின்ன வயசு ஃப்ளாஷ்பேக் கொசுவத்தியை சந்தானத்திடம் பற்றவைக்கும் சசிகுமார், அதே கொசுவத்தியை நண்பன் மதன்குமாரிடம் பற்றவைத்து ஐந்து லட்சம் வாங்கி வர, சென்னைக்கு பஸ் ஏறுகிறார்.

சென்னையில் டைரக்டர் மதன்குமாரின் அட்ரஸை சூரியிடம் விசாரித்துத் தப்பாக தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷைச் சந்திக்கிறார். அங்கே புதிய இயக்குநர்களிடம் கதை கேட்கும் ஜெயப்பிரகாஷ், சசிகுமார், மதன்குமாரின் அசிஸ்டென்ட் என்று அவராகவே நினைத்து, சசி சொன்ன நட்புக் கதையையும் சினிமாக் கதை என்று நினைத்து ஐந்து லட்சம் அட்வான்ஸ் கொடுத்து (அதே ஐந்து லட்சம்) ''இந்தக் கதையைப் படமாப் பண்ணிடுங்க'' என்கிறார்.

உள்ளே உண்மையைச் சொல்லாமல், வெளியே வந்து ஃபீல் ஆகும் சசிகுமாரிடம், ''கவலைப்படாதே''னு சொல்லி, சினிமாவைக் கற்றுக்கொள்ள சில படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராகச் சேர்த்துவிடுகிறார் சூரி. ஒரே நேரத்தில் டைரக்டர், அசிஸ்டென்ட் டைரக்டர் என்று சவாரி செய்யும் சசிகுமாரைச் சந்தித்தேவிடுகிறார் நண்பன் டைரக்டர்.

''ஏன் என் அசிஸ்டென்ட்னு பொய் சொன்னே?'' என்று கேட்பவரிடம், ''நான் உங்க ரசிகன்'' என்று சமாளிக்கிறார் சசிகுமார். ''உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே?'' என்று சூரி கேட்க, ''நண்பனாத் தேடி வரும்போதுதான் உண்மை சொல்லணும்'' என்று தத்துவம் நம்பர் 2001-ஐ உதிர்க்கிறார் சசி. ஆனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருக்கே உண்மை தெரிய, ''உங்க கதையைப் படமா எடுத்தா கண்டிப்பா 100 நாள் ஓடும். (நோ, நோ அப்படில்லாம் முறைக்கக் கூடாது). ஆனா சினிமா அனுபவம் இல்லாததால் கதையை என்கிட்ட வித்துக் காசு வாங்கிக்குங்க'' என்று ஜெயப்பிரகாஷ் சொல்ல மறுக்கிறார் சசிகுமார்.

அதுக்கப்புறம் நண்பன் டைரக்டரே சசிகுமாரைச் சந்தித்து, ''தமிழில் முதல் படம் பண்ணப்போறேன். என்கிட்ட கதை இல்லை'' என்று கேட்கிறார். (எங்க 'ஜெயம்’ ராஜாவெல்லாம் கைவசம் கதையே இல்லைன்னாலும் தெலுங்குப் படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுப்பாப்ல.

 தெலுங்குல மூணு ஹிட் கொடுத்த மதன்குமாருக்கு கதைப் பஞ்சம். ஹூம்) ''நீங்க கேட்டாக் கட்டை விரலையே காணிக்கையாத் தருவேன். கதையைத் தர மாட்டேனா?'' என்று தத்துவம் நம்பர் 3001-ஐ உதிர்த்துவிட்டு, தயாரிப்பாளரிடம் காசும் வாங்க மறுத்து, மீண்டும் கோயம்புத்தூருக்கே வருகிறார் சசிகுமார்.

அங்கே வந்து பார்த்தால், சசிகுமார் கோயிலா நினைச்சுக்கிட்டிருந்த தியேட்டரில் வளைச்சு வளைச்சு பிட்டுப் படங்கள் ஓட்டுகிறார் சந்தானம். ஏற்கெனவே தயாரிப்பாளரிடம் வாங்கிய ஐந்து லட்சத்தை ஊருக்கு அனுப்பியும் ஏன் சந்தானம் கஜகஜா படம் ஓட்டுகிறார்?

அதுக்கும் ஒரு காரணம் இருக்குல்ல? சசிகுமார் டைரக்டர் ஆகிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டு ஞானசம்பந்தனுக்கு சந்தோஷத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாம். (இவ்வளவு ட்விஸ்ட் வெச்சா, வராம என்னங்க பண்ணும்?) ஞானசம்பந்தனுக்கு சிகிச்சை பார்த்ததில் ஐந்து லட்சம் அவுட் ஆக, அப்புறம் என்ன, ஷகிலாதான், சல்சா படம்தான். டயர்ட் ஆகாதீங்க பாஸ், இன்னொரு முக்கியமான ட்விஸ்ட். சசிகுமாரின் காதல் பெண்ணுக்கும் நண்பன் டைரக்டருக்கும் திருமணம் வேறு நிச்சயமாகிவிடுகிறது.

தியாகி பென்ஷன் வாங்காமலே நட்புக்காகப் பல தியாகங்களைச் செய்யும் சசிகுமார் இதையும் ஏற்றுக்கொள்கிறார். திடீரென்று கமர்ஷியல் டாக்ஸ் அலுவலகத்தில் இருந்து சசிகுமாருக்கு அழைப்பு. ''நீங்க மக்களுக்குச் செஞ்ச சேவையைப் பாராட்டி அரசாங்கமே டாக்ஸைத் தள்ளுபடி செஞ்சுடுச்சு'' என்கிறார் அதிகாரி. (நல்லாக் கவனிங்க மக்களே! தியேட்டரை மூடுறதுக்கு முன்னால ஓடினது எல்லாமே பிட்டுப் படங்கள்...சேவை!)

அப்புறம் என்ன, தியேட்டரின் நூலாம்படையை எல்லாம் நீக்கிவிட்டு, யாருமே வராத தியேட்டரில் தனியாகப் படம் ஓட்டி ஃபீல் ஆகிறார் சசிகுமார். அதே நேரம் நண்பன் டைரக்டருக்கும் காதலிக்கும் திருமண ரிசப்ஷன். அப்புறம் உண்மை தெரிஞ்ச டைரக்டர் சசிகுமாரைப் பார்க்க வந்து...

ஹலோ பாஸ், ஏன் படிச்சிட்டிருக்கும்போதே பாதியில் எந்திரிச்சு தம் அடிக்கப் போயிட்டீங்க? நாங்கல்லாம் பாவம் இல்லையா? 'அப்போ படத்தில் வித்தியாசமே இல்லையா?’ங்கிறீங்களா? ஏங்க இல்லை? இதுநாள் வரைக்கும் கரட்டுமேட்டில் கைலியோட சுத்திட்டிருந்த சசிகுமார் முதன்முறையா ஃபாரீன் டூயட்டெல்லாம் ஆடறாரே! மறுபடி மறுபடி முறைக்காதீங்க பாஸ். ஏற்கெனவே நொந்துபோயிருக்கோம்.

ஆனா ஒண்ணுங்க, எனக்கெல்லாம் இந்தப் படத்தில் ரெண்டே ரெண்டு கோரிக்கைதாங்க.

கோரிக்கை நம்பர் ஒன் : படத்துக்கு 'பிரம்மன்’னு டைட்டில் வெச்சதுக்குப் பதிலா 'எமன்’னு வெச்சிருக்கலாம். மரண பயத்தைக் காட்டிட்டீங்களேய்யா?

கோரிக்கை நம்பர் டூ : படம் ஒரு வழியாக முடிந்து அப்பாடா என்று எழும் நேரத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் ஒரு பாடல் ஒலிக்கிறது, ''ஓடு ஓடு ஓடு...'' என்று. இதை ஓப்பனிங் சாங்காப் போட்டிருந்தா அப்பவே அப்படியே ஓடியிருப்போமே டி.எஸ்.பி. சார்!
+

அடுத்ததாக தெலுங்கில் களமிறங்கும் சூர்யா...!



பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சியில் சமூக பிரச்சனைகள் குறித்து நட்சத்திர நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி சத்தியமேவே ஜெயதே.

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது பருவம் மார்ச்-2ல் தொடங்க உள்ளது.

இந்நிகழ்ச்சி பிரபலமானதையடுத்து மராத்தி, பெங்காலி, தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தொலைக்காட்சிகளுக்கு திரைப்பட பிரபலங்கள் உள்ளே அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்யை மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் சூர்யாவும் நடத்த உள்ளனர்.

நம் நாட்டின் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடித்து வெளிப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் வெளிபடுத்த மக்கள் ஒன்றாக சத்தியமேவே குழு விசாரணை நடத்த பிராண்ட் அம்பேசிடர்களோடு பாடுபடுகிறது.
+

அனுஷ்காவிற்கு வயதாகிவிட்டதாம்...பேக்-அப் சொல்லும் திரையுலகம்...!



அனுஷ்காவுக்கு, கௌதம் மேனன் இயக்கவுள்ள அஜித் படத்தில், நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற, தன் கனவு, நனவாகப் போகிறது என்று உற்சாகத்தில் இருந்தார் அனுஷ்கா.

ஆனால், அனுஷ்காவை நேரில் பார்த்த போது, அவரின் முகத்தில், நிறைய முதிர்ச்சி தெரிந்ததால், இப்போது அவருக்கு பதிலாக, வேறு நடிகையை, ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார் கௌதம் மேனன்.

இந்த படத்தில், அஜித்தை இளமையாக காண்பிக்க திட்டமிட்டுள்ள கௌதம் மேனன், அஜித்தின் கெட்டப்புக்கு பொருத்தமான நடிகையாக இப்போது தேடி வருகிறார். இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என,கவலைப்பட்டு கொண்டிருக்கிறார், அனுஷ்கா.
+

''தெகிடி'' - விறுவிறுப்பான திரை விமர்சனம்…!



எம்.ஏ,க்ரிமினாலஜி முடிக்கும் ஹீரோவுக்கு ஒரு டிடெக்டிவ் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சில நபர்களைப் பின் தொடர்ந்து அவர்களைப் பற்றி ரிப்போர்ட் சப்மிட் பண்ணும்படி அசைன்மெண்ட் தரப்படுகிறது. அந்த நபர்களில் ஹீரோயினும் ஒருவர். இவரும் ரிப்போர்ட் தர, அடுத்தடுத்து அந்த நபர்கள் வரிசைப்படி கொல்லப்படுகிறார்கள். ஹீரோ ஹீரோயினை காப்பாற்றினாரா? யார் அவர்களைக் கொல்வது? விசாரிக்கச் சொன்ன க்ளையண்ட் யார்? என ஹீரோ துப்பறிவதே கதை.

ஒரு துப்பறியும் படத்திற்கே உரிய நீட்டான திரைக்கதை. அமைதியாக ஆரம்பித்து, முதல் கொலை விழுந்தது முதல் பரபரப்பாகச் செல்கிறது. அதிக நடிகர் கூட்டம் இல்லாமல், முக்கிய பாத்திரத்தில் ஏழு பேர் மற்றும் துணைப்பாத்திரங்களாக இன்னும் ஏழுபேர் என சுருக்கமாக ஆட்களை நடிக்க வைத்திருப்பதே படத்திற்கு க்ரிப்பைக் கொடுக்கிறது.

ஹீரோ அசோக் செல்வனுக்கு முதல் வேலைக்கான ஆஃபர் வர, சென்னை வருகிறார். அவர் வேலையில் சேரும் டிடெக்டிவ் நிறுவனத்தின் பாலிசிகளில் ஒன்று, ஃபாலோ செய்யப்படும் நபருடன் டைரக்ட் காண்டாக் வைக்கக்கூடாது என்பது. அதன்படியே நடக்கும் ஹீரோ, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் காதலால் பாலிசியை மீறுகிறார். அதுவரைக்கும் சாதாரணமாகச் செல்லும்படம், அதன்பின் நடக்கும் சம்பவங்களால் சூடு பிடிக்கிறது.

கொஞ்சம் நடிகர்கள் தான் என்பதால் மெயின் வில்லன் இவராகத் தான் இருப்பார் என இரண்டு பேரை கெஸ் பண்ண முடிகிறது. ஆனாலும் படம் முடிகையில் கொடுக்கும் ட்விஸ்ட், அருமை. ஒரு ஹாலிவுட் பட ஸ்டைலில் நகரும் படத்தில் மிஸ் ஆவது, பரபரப்பான ஆக்சன் சீகுவென்ஸ் தான். வெறுமனே புலனாய்வும், தேடுவதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைக் கொடுக்கிறது.

அதனால் தான் முதல்பாதியிலும் இரண்டாம்பாதியிலும் செமயான ஆக்சன் ஃபைட் அல்லது சேஸிங்கை ஹாலிவுட்டில் வைத்துவிடுவார்கள். ஆனால் அது இல்லாததால், ஹீரோ பெரிதாக ஒன்றுமே செய்யவில்லையோ என்று தோன்றிவிடுகிறது. வெறும் மைண்ட் கேம், படிக்க நன்றாக இருக்கலாம், விஷுவலுக்கு அது மட்டும் போதாதே!

இன்னொரு குறை, ஹீரோவையே ஓவர் டேக் பண்ணும் ஜெயப்ரகாஷ் கேரக்டர். பிறகு இயக்குநர் சுதாரித்து தனி ரூட்டில் ஹீரோவை துப்பறிய விட்டாலும் ஜெயப்ரகாஷ்க்கு முன் ஹீரோ பம்மிக்கொண்டு சப்பையாக தோன்றுவது, இத்தகைய த்ரில்லர் படங்களில் இருக்கக்கூடாத ஒரு விஷயம். ஹீரோவை சாமானியனாக காட்டியதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் விறுவிறுப்பாகச் செல்லும் நல்ல த்ரில்லர் தான். அதிலும் கடைசியில் சொதப்பாமல், லாஜிக்கலாக எல்லாக் கொலைகளுக்கும் காரணம் சொல்லி இருப்பது அருமை.

வில்லாவுக்கு அடுத்து தனி ஹீரோவாக இவருக்கு இரண்டாவது படம். அசோக் செல்வனுக்கு வில்லாவில் அடித்த பேய் இன்னும் தெளியவில்லை போல. எப்போதும் சீரியஸான ஆளாகவே வருகிறார். முகமே அப்படியா, அல்லது சீரியஸான கேரக்டர் என்று இயக்குநர் ரொம்ப மிரட்டி விட்டாரா என்று தெரியவில்லை. ஏ செண்டருக்கு இது போதும். பி அண்ட் சி செண்டரை ரீச் செய்ய வேண்டும் என்றால், இன்னும் இறங்கி அடிக்கணும் பாஸ்!

அவன் இவனில் நடித்து பின்னர் காணாமல் போன ஜனனிக்கு இது நல்ல ஒரு ரீ எண்ட்ரி. அவருக்கு ப்ளஸ்ஸே கண்கள்(மட்டும்?) தான். அதில் பலவித எக்ஸ்பிரசன்ஸ் காட்டி, நம்மைக் கவர்கிறார். அவருக்குத் தெரியாமலேயே ஹீரோ அவரைக் காப்பாற்ற முயல்வதால், த்ரில் ஏரியாவுக்குள் அவருக்கு பெரிதாக வேலையில்லை. காதல் போர்சன் மட்டும் என்பதால் கலர்ஃபுல்லாகவே வந்து போகிறார்.

மொத்தத்தில் ‘தெகிடி’ விறுவிறுப்பான படம்…..
+

பனிவிழும் மலர்வனம் - திரை விமர்சனம்..!



காதல்படம் என்கிற எண்ணத்தில் திரையரங்குக்குள் வருகிறவர்களை படம் தொடங்கி சிறிதுநேரம் வரைதான் நிறைவு செய்யமுடியும். அதன்பின்னர் படம் வேறுதிசையில் பயணிக்கிறது. புலிவரும்அடர்வனம் என்று பெயர் வைத்திருக்கலாம்.

முகநூல் மூலம் அறிமுகமாகி காதலிக்கத் தொடங்கும் நாயகன் அபிலாஷ் நாயகி சானியதாரா ஆகிய இருவருக்கும் முகலாயர்காலத்திலிருந்து இருக்கும் பெற்றோர்எதிர்ப்பு வந்துவிடுகிறது.

 நாயகனின் தந்தையாக நாசர் நடித்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு அவரைப்போலவே இருக்கிற அவருடைய தம்பி ஜவகர் நடித்திருக்கிறார். இவ்வளவுகாலம் தமிழ்த்திரையுலகம் இவரை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டது? நாயகன் அபிலாஷைப் பார்க்கப்பார்க்கத்தான் பிடிக்கும் போலிருக்கிறது.

இந்தப்படத்தில் பிடிக்கவில்லை. நாயகி தாழ்வில்லை. பொதுவாகக் காதலுக்குக் கண்ணில்லை என்று சொல்வார்கள், இந்தக்காதலுக்கு அறிவில்லை.

 படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் நாயகன், கல்லூரியில் படத்துக்கொண்டிருக்கும் நாயகி ஆகிய இருவருக்கும் வீட்டில் எதிர்ப்பு வந்ததும் எங்கு போவதென்றே தெரியாமல் முதலில் வருகிற பேருந்தில் ஏறிவிடலாம் என்று சொல்லி தேனிக்குப் பயணப்படுகிறார்கள்.

இத்தனைக்கும் தமிழ்த்திரையுலக வழக்கம் போல நாயகனுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

அங்கு போயும் கோயில் கோயிலாகப் போய் எங்களுக்குத் திருமணம் செய்துவையுங்கள் என்று கேட்கிறார்கள், படிப்பறிவு இல்லதவர்கள்கூடப் பயப்படும் வனத்துக்குள் கவலையின்றிச் சுற்றுகிறார்கள் போன்ற அபத்தங்களெல்லாம் படத்தில் இன்னொரு நாயகியாக இருக்கின்ற வர்ஷாஅஷ்வதியைச் சந்திக்கத்தான்.

தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களுக்குள்ளேயே பெண்களுக்குப் பாலியல்வன்முறைகள் நடக்கும்போது மேகமலை மாதிரி வனப்பகுதியில் நடக்காமலா இருக்கும்?

நாயகி சானியதாரா மீது வனத்துக்குள் திரியும் சில குற்றவாளிகளுக்கு ஆசை வருகிறது. அவர்களிடமிருந்து தப்ப காதலர்கள் போராடுகிற நேரத்தில் தன் சிறுவயது மகனோடு வந்து அவர்களைக் காப்பாற்றுகிறார் வர்ஷா.

அதன்பின்னர் மொத்தப்படமும் இயற்கைஎழில் சூழ்ந்த வனப்பகுதிக்குள்ளேயே நடக்கிறது. சந்திரனும் சூரியனும் கூட நுழையமுடியாதகாடு என்று பாட்டெழுதியிருக்கிறார் வைரமுத்து, அந்தவரிகளை சமதளத்தில் நின்றுபாடிக்கொண்டிருக்கிறார்கள் காதலர்கள்.

அந்தக்காதலர்கள் காட்டுக்குள் போனதும் கதைக்களம் காதலில் இருந்து விலகிப்போய் விடுகிறது. காதலர்களுக்கு கோழி, மீன் என்று நன்றாகச் சமைத்துப்போடுகிறார் வர்ஷா. பார்க்கும்போது நாக்கு ஊறுகிறது. வர்ஷாவின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கவர்கிறான்.

 பாவாஇலட்சுமணனைக் கிண்டல் செய்கிற மாதிரி மாரிமுக்கா என்று கத்துவது ரசிக்கவைக்கிறது. வனம் பற்றியும் விலங்குகள் பற்றியும் நல்ல கருத்துகளைச் சொல்கிறார்கள். காலகாலமாக விலங்குகள் போகும்பாதையில் நாம் வீடு கட்டிக்கொண்டுவிட்டால் அவை என்ன செய்யும்?

உட்பட சில வசனங்களில் இயற்கை மீது மனிதர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் வன்முறைகளை எடுத்துச்சொல்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கூடியிருக்கிறது என்பதற்கு இந்தப்படமும் இதன் இயக்குநரும் சான்று.

காடு பற்றியும் அங்குள்ள வாழ்க்கை பற்றியும் வர்ஷா பேசுவதைக் கேட்கும்போது அவர் அங்கேயே பிறந்துவளர்ந்த மாதிரி தெரிகிறது. அப்படியே விட்டிருக்கலாம் கடைசிக்காட்சியில் அவரைப் பெருமைப்படுத்துகிறேன் என்று அதையும் உடைத்துவிடுகிறார்கள். அவரும் காதலுக்காக வீட்டைவிட்டு ஒடிவந்து அந்தக்காட்டில் வசிப்பவராம்.

வர்ஷாவின் சின்னவயது மகனுக்கு ஒரு விநோதமான நோயைச் சொல்லி அதற்கு மருத்துவம் செய்யப்பணம் புரட்டும் காட்சிகளை வைத்து நோகடிக்கிறார்கள். அந்தக்காட்டுக்குள் சீட்டுசேர்க்கிற ஒருவர் நேர்மையாகப் பணத்தைக் கொண்டுவந்துகொடுக்கிறார்.

வர்ஷா வசிக்கும் ஓட்டுவீட்டுக்குக் கடன் இருக்கிறது போன்ற வியப்புகளும் இருக்கின்றன. ஒருவழியாகப் பணத்தைச் சேர்த்துக்கொண்டு காட்டுவழியாகப் போனால் சீக்கிரம் போய்விடலாம் என்று அவர்கள் காட்டுக்குள் போனதும் படத்தில் விறுவிறுப்பும் படபடப்பும் ஒருசேரச் சூழ்ந்து கொள்கிறது. புலி நடமாடும் காட்சிகளை நன்றாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

புலி நன்றாக நடித்திருக்கிறது. அந்தக்காட்சிகளில் நமக்கு இருக்கும் பதட்டம்கூட புலியிடம் அகப்பட்டுக்கொண்டிருப்பவர்களிடம் தெரியவில்லை. பஞ்சுமெத்தையில் உட்கார்ந்திருப்பதைப்போல மரக்கிளையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவ்வளவு நெருக்கடியான சூழலில் ஒரு குழந்தை நோயின் வலியில் துடிப்பது போல் காட்டி நம்முடைய கோபத்தைச் சம்பாதிக்கிறார் புதுஇயக்குநர் ஜேம்ஸ்டேவிட்.

தன் மகனின் உயிர் காக்க வர்ஷா எடுக்கும் முடிவு நெகிழவைக்கிறது. தன் குழந்தையை மட்டுமின்றி புலிக்குட்டியையும் அவர் காப்பாற்றுகிறார் என்று காட்டியிருப்பது தாய்மையின் உச்சம். இவ்வளவும் அந்தக்காதலர்கள் தங்கள் பெற்றோர் பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ளத்தான் உதவுகிறது எனும்போது, இதற்காகவா இத்தனை துயரம் என்ற எண்ணம் வருகிறது.
+

‘வல்லினம்’ - திரைவிமர்சனம்...!



நடிகர் : நகுல்

நடிகை : மிருதுலா பாஸ்கர்

இயக்குனர் : அறிவழகன்

இசை : தமன்

ஓளிப்பதிவு : பாஸ்கர்

திருச்சியில் கல்லூரி ஒன்றில் நகுலும், கிருஷ்ணாவும் நண்பர்களாக படித்து வருகின்றனர். இருவரும் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுடைய விளையாட்டு அந்த கல்லூரியில் பிரபலம்.

இந்நிலையில், ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நகுல் அடிக்கும் பந்து எதிர்பாராத விதமாக கிருஷ்ணா நெஞ்சில் பட்டுவிட அந்த இடத்திலேயே கிருஷ்ணா இறந்து விடுகிறார். தன் நண்பன் மரணத்தை தாங்க முடியாத நகுல், அந்த கல்லூரியில் இருந்தே விலகுகிறார். மேலும், தன் நண்பன் சாவுக்கு காரணமான கூடைப் பந்தை இனிமேல் விளையாடக்கூடாது என்றும் முடிவெடுக்கிறார்.

அதன்படி, சென்னைக்கு வந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். இதே கல்லூரியில் படிக்கும் மிருதுளா, சந்துரு ஆகியோர் நகுலுடன் நட்பு கொள்கிறார்கள். நாளடைவில் நகுலின் நடவடிக்கைகள் நாயகி மிருதுளாவிற்கு பிடித்துப்போக அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். நகுலும் அவளை காதலிக்கிறார்.

சந்துரு அந்த கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இருந்தும் தன்னுடைய அணியால் கல்லூரிக்கு இதுவரை ஒரு கோப்பைகூட பெற்றுத்தர முடியாத ஆதங்கத்தில் இருந்து வருகிறார்.

அதே கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் கல்லூரியின் பெயரை நிலைநிறுத்திய தலைக்கணத்தில் இவர்களைப் பார்த்து கிண்டலடிக்கின்றனர். மேலும், கூடைப்பந்து விளையாட்டை தரக்குறைவாகவும் பேசுகின்றனர்.

இதனால் வெகுண்டெழும் நகுல், சந்துருவுடன் இணைந்து கூடைப்பந்து விளையாட்டின் மகத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்க முடிவெடுக்கிறார். இறுதியில், கூடைபந்து விளையாட்டில் நகுல் தன்னுடைய முழு திறமையைப் பயன்படுத்தி கல்லூரிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தின் நாயகன் நகுல், ஒரு கூடைப்பந்து வீரருக்குண்டான எல்லா தகுதியும் இவருக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மாறுபட்ட நடிப்பில் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். கூடைப்பந்து விளையாடும்போது ஒரு அனுபவ வீரரைப் போலவே விளையாடியிருக்கிறார். கதை முழுவதும் இவரை மையப்படுத்தியே நகர்வதால், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அதை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகி மிருதுளாவுக்கு நாயகனை காதலிப்பது மட்டுமே வேலை என்பதால், இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே. இருந்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். திருச்சியில் நண்பராக வரும் கிருஷ்ணா, அங்கு பயிற்சியாளராக வரும் நடிகர் ஆதி ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கின்றனர். சென்னையில் நண்பராக வரும் சந்துருவும், நடிப்பில் நகுலுக்கு போட்டி போட்டிருக்கிறார்.

கல்லூரி முதல்வராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், பயிற்சியாளராக வரும் அதுல் குல்கர்னி, கதாநாயகியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிப்பில் மிளிர்கின்றனர்.

தமிழில் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுக்களை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கிறன. ஆனால், கூடைப்பந்து விளையாட்டை வைத்து தமிழில் இதுவரை ஒரு படம்கூட வந்ததில்லை. அதை இயக்குனர் அறிவழகன் சரியாக புரிந்துகொண்டு, அழகாக படமாக்கியதற்காக பாராட்டலாம். நட்பை மையப்படுத்தி, அதில் விளையாட்டை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.

கே.எஸ்.பிரபாகரன் ஒளிப்பதிவில் கூடைப்பந்து விளையாட்டை அழகாக படமாக்கியிருக்கிறார். இவருடைய கேமரா கண்கள் படத்தின் காட்சிகள் நம் கண்களை உறுத்தாமல் இருக்க ரொம்பவும் விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான்.

மொத்தத்தில் ‘வல்லினம்’ மெல்லினம்.
+

Thursday 27 February 2014

இதெல்லாம் இங்கு சகஜம் தான் - வாய்ப்பு கிடைத்தா விடுவாங்களா...!



பொது இடத்தில் டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்துள்ளார் ஹீரோ அமித் சத். தமிழில் ஆரம்பம் படத்தினைத் முனி 3 கங்கா படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி.

மேலும் இந்தியிலும் அமித் ராய் இயக்கத்தில் ‘ரன்னிங் ஷாதி.காம்’ படத்தில் நடித்துள்ளார்.

 இதன் ஹீரோவாக அமித் சத் தான் நடித்திருக்கிறார்.

ரொமான்டிக் கொமடி என்டர்டெயினர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் புரொமோஷன் மும்பையில் நடந்தது. இதில் அமித் சத், டாப்ஸி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக டாப்ஸியின் கன்னத்தில் திடீரென்று முத்தமிட்டுள்ளார் அமித் சத். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
+

தமிழக அரசு நோ சொன்னாலும் விடமாட்டேன்... ஏன்னா நான் தனி ஆளில்லை..!



கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் பெயர் சூட்டப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்படும்
என்று தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது.

அன்றுமுதல் தமிழில் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்திற்குச் சம்பந்தம் இல்லாவிட்டாலும் தமிழ்ப் பெயர்களையே வைக்க ஆரம்பித்தனர். பின்னர் மீண்டும் இச்சட்டம் சில வரைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. குறிப்பாக U சான்றிதழ் பெறும் திரைப்படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்று திருத்தியமைக்கப்பட்டது.

அந்தவகையில் இந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிப்பில் வெளியான இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு U சான்றிதழ் வழங்கியிருந்தது.

ஆனால் இப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார் உதயநிதி.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருப்பதாக உதயநிதி கூறியுள்ளார்.

இதே போல இவ்வாண்டு வெளியான ஜில்லா மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்களும் உ சான்றிதழ் பெற்றபோதும், கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
+

அடுத்த 5 வருஷத்துக்கு உங்கள் ஆயுள் கெட்டியா..? - வாங்க தெரிஞ்சிக்கலாம்..!



உயிரினங்களின் வாழ்வில் மரணம் எப்போது வரும்? என்பது இப்போதுவரை மர்மமாக உள்ளது. ஆனால், அதையும் ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அதாவது மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் முனைகளில் ‘டெலோ மர்ஸ்’ என்ற மூலப்பொருள் உள்ளது.

செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது ‘டெலோ மர்ஸ்’சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும். அந்த அடிப்படையில், செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 பாடும் பறவைகளிடம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டது.

இதையடுத்து இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளதாக கிழக்கு ஆங்லியா பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்து இருந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் நவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பேராசியர் தெரிவித்துள்ளார்..

பின்லாந்தின் யுலு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் புது வகையான ரத்த பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து அவர் ”ரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும்.

அந்த வகையில், பின்லாந்தில் 17,000 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் ஆகியோரின் ரத்த மாதிரிகளில், அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த ரத்தப் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.

இதேபோல் பிற நோயால் தாக்கப் பட்டவர்களின் உடல்நிலையையும் இதன் மூலம் அறியலாம். நன்றாக இருப்பவர்களின் ரத்தத்துக்கும், நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன. இதை கண்டறியும் நவீன சோதனைக்கு, நியூக்ளியர் மேக்னடிக் ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியும்:. என்று மைகா தெரிவித்துள்ளார்.
+

இதான்பா பிரசாந்தோட சாஹசம் படத்தோட கதை!



சூப்பர் ஸ்டாருக்கு முன்பாகவே உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த பெருமைக்குச் சொந்தக்காரரான பிரசாந்த் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டிற்குத் திரும்பியுள்ளார்.

தனது சொந்தப் பட நிறுவனமான ஸ்டார் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான அருண் ராஜ் இயக்கத்தில் சாஹசம் திரைப்படத்தில் நடித்துவருகிறார் பிரசாந்த்.

பொதுவாக ஒரு திரைப்படம் உருவாகி, அப்படம் வெளியாகும் வரையிலும் அப்படத்தின் கதை வெளியில் கசிந்துவிடாமல் இருக்க படக்குழு மிகவும்
கவனத்துடன் இருக்கும்.

ஆனால் பிரசாந்த் நடித்துவரும் சாஹசம் திரைப்படத்தின் கதை வெளியாகியிருப்பதாக இணையத்தில் செய்திகள்
உலவிவருகின்றன.

படித்த இளைஞன் ஒருவன் வேலை தேடி அலைவதும், வேலை தேடும் இடங்களில் அவன் அவமானப்படுத்தப்படுவதாகவும், அதன் பின்னர் அந்த இளைஞனே சொந்தமாகத் தொழில் துவங்கி, அவனை அவமானப்படுத்தியவர்களை இவனது நிறுவனத்திலேயே வேலைக்காரர்களாக மாற்றுவதாகவும் விரிகிறதாம் இப்படத்தின் கதை.

இது இப்படத்தின் உண்மைக் கதையா அல்லது வதந்திகளா என்பது விரைவில் தெரியவரும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடித்துவரும் இப்படத்தின் ஹீரோயினுக்கான தேடல் நடைபெற்றுவருவதாகவும், முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
+

தமிழில் விலைபோகல அதனால மும்பைக்குச் செல்கிறேன் - டாப்சி...டாடா...



ஆடுகளம் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்சி. அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என நம்பினார்.

மும்பைக்கு ஜாகை மாறிய டாப்சி டாப்சி ஆனால் அவர் நம்பிக்கை மோசம் போனது. பெரிய வாய்ப்புகள் இல்லை.

எந்த பெரிய ஹீரோவுடனும் அவரால் ஜோடியாக நடிக்க முடியவில்லை. அப்படி வந்த ஒரு வாய்ப்பிலும் இரண்டாவது நாயகி வேடம்.

லூசுத்தனமான அந்த பாத்திரமும் எடுபடாமல் போய்விட்டது.

இப்போதைக்கு முனி 3, வை ராஜா வை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹைதராபாதில் தங்கி தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் டாப்சி.

இந்த நிலையில் இனி தமிழில் அதிக படங்கள் இல்லை என்பதால் இந்திக்குப் போனார்.

சாஸ்மி பதூர் படத்தில் நடித்தார்.

அந்தப் படத்தின் வெற்றியால் தொடர்ந்து இந்திப் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

இப்போது ரன்னிங் ஷாதி.காம் படத்தில் நடித்து வருகிறார்.

 இனி இந்திப் படங்களில் நடிக்க வசதியாக, மும்பையிலேயே ஒரு வீடு எடுத்துத் தங்க முடிவு செய்துள்ளார்.

தீவிரமாக வீடு தேடிய அவர், இப்போது ஒரு ப்ளாட்டில் தங்கி புதிய வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம்.
+

ஆர்யாவுக்கு திருமணம் நடப்பது...?



இன்னும் நான் தேடும் கனவுக் கன்னி என் கண்ணில் படவில்லை. அதனால் என் திருமணம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது என்று ஆர்யா தெரிவித்துள்ளார். மேலும்,

கோலிவுட்டின் பிசி நாயகர்களுள் ஒருவர் ஆர்யா. கடந்த ஆண்டு அவர் நடித்த சேட்டை, ராஜா ராணி, ஆரம்பம் மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் ரிலீஸாகின.

இந்த ஆண்டும் அவரது படங்கள் குறைவில்லாமல் ரிலீஸ் ஆகும்.

ஆர்யா தற்போது மீகாமன் மற்றும் புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் புறம்போக்கு படத்தில் அவருடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.

ஆர்யா என்றாலே நடிகைகளுடன் ஜாலியாக பேசுவார், அவர்களை கலாய்ப்பார் என்று அனைவருக்கும் தெரியும். ஆர்யாவுக்கு மச்சம் தான் பலர் கூறும்படி அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

ஆர்யாவும், நயன்தாராவும் காதலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. இந்நிலையில் நயன்தாராவின் பெயர் தற்போது அவரது முன்னாள் காதலருடன் சேர்ந்து அடிபடுகிறது.

ஆர்யாவுக்கு திருமணம் எப்பொழுது என்று பலர் கேட்டாலும் அதற்கு பதில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் திருமணம் பற்றி பேசியுள்ளார்

ஆர்யா நினைக்கும் கனவுக் கன்னி இன்னும் அவர் கண்ணில் படவில்லையாம். அத்தகைய கனவுக் கன்னி கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வாராம். அதுவரை அவரது திருமணம் ஒரு கேள்விக்குறிதானாம்.
+

இன்றைய ரிலீஸ் சினிமாக்கள் ஒரு பார்வை...



இன்றைய ரிலீஸ் சினிமாக்கள் ஒரு பார்வை...

‘வல்லினம்’,

 ‘தெகிடி’,

‘அங்குசம்’,

‘காதல் சொல்ல ஆசை’,

 ‘அமரா’ ஆகிய தமிழ்படங்களும்,

 ‘வெற்றிமாறன்’ என்ற மலையாள படமும்,

 ‘நான் ஸ்டாப்’,

‘பறக்கும் கல்லறை மனிதன்’,

‘ஆக்ஷன் கிட்ஸ்’ ஆகிய ஆங்கில படங்களும்,

‘கரன்சி ராஜா’ என்ற தெலுங்கு படமும் ரிலீசாகின்றன.

இவற்றில்

 ‘வல்லினம்’,

‘தெகிடி’

படங்கள் மட்டும் மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளன.

‘வல்லினம்’ படத்தில் நகுல் நாயகனாக நடித்துள்ளார்.

மலையாளம், ஆங்கில படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

‘வல்லினம்’ 400–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

மற்ற தியேட்டர்களில் மீதியுள்ள படங்கள் வெளியாகிறது.
+

அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய சிம்பு...!



சிம்புவின் காதல்களையும், காதல் பிரிவுகளையும் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புரியும்.

உருகி உருகி காதலிக்கும் சிம்பு, காதல் முறிந்த பிறகு உக்கிரமாக மாறிவிடுகிறார்.

காதலித்த பெண்ணைப் பற்றியும், காதலித்தக் காலத்தில் அப்பெண்ணுக்கும் தனக்குமான அந்தரங்க விஷயங்கள், பரிமாற்றம் பற்றி பிறரிடம் பேசாதிருப்பதே பேராண்மை. அதுவே அந்த காதலிக்கும், காதலுக்கும் செய்யும் மரியாதை.

எந்தக்காலத்திலும் சிம்புவிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.

பிரபல நடிகரின் மகளை சிம்பு காதலித்ததாகவும், பிறகு அந்த காதல் பிரேக் அப் ஆனதாகவும் பல வருடங்களுக்கு திரையுலகில் ஒரு பேச்சு இருந்தது. அது உண்மைதான் என பின்னாட்களில் உறுதியானது. காரணம்…இணையத்திலும், செல்போன் வழியாகவும் உலா வந்த ஒரு தொலைபேசி உரையாடல்.

அந்த உரையாடலில் சிம்புவும், பிரபல நடிகரின் மகளும் காரசாரமாக உரையாடுகிறார்கள். பின்னர் அப்பெண்ணின் அம்மா, அதாவது பிரபல நடிகரின் மனைவி சிம்புவிடம் பேசுகிறார்.

மிக அந்தரங்கமான இந்த உரையாடல் வெளியே வந்தது எப்படி?

யார் இதை பதிவு செய்தார்கள்?

யார் இதை இணையத்திலும், செல்போன் வழியாகவும் பரப்பினார்கள்?

பிறகு நயன்தாரா உடன் காதல்வயப்பட்டார் சிம்பு.

நயன்தாரா தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் இரவு பகலாக இருவரும் கூத்தடித்தார்கள்.

அப்போது வல்லவன் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தனர் – இருவரும். படப்பிடிப்பு நடக்கும்போது கேரவானுக்குள் புகுந்து கொண்டு கொட்டம் அடித்தனர்.

சில மாதங்களில் நயன்தாரா சிம்புவை வெட்டிவிட்டார்.

வழக்கம்போல் உக்கிரமானார் சிம்பு.

சில நாட்களில், நயன்தாரா உடன் சிம்பு உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படங்களில் நயன்தாராவின் உதட்டை கவ்விக்கொண்டிருந்தார் சிம்பு.

கவனிக்க…இந்தப் புகைப்படங்கள் நயன்தாராவும் சிம்புவும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இந்த புகைப்படங்கள் வெளியே வந்தது எப்படி?

யார் இதை எடுத்தார்கள்?

யார் இதை மீடியாவுக்குக் கொடுத்தார்கள்?

பிரபல நடிகரின் மகளுடனும், நயன்தாரா உடனும் காதல் பிரிவு ஏற்பட்டபோது அந்தரங்கமான விஷயங்கள் எப்படி வெளியே விடப்பட்டதோ, அதுபோலவே இதோ…இப்போதும் ஹன்சிகா உடனான காதல் முடிவுக்கு வந்துவிட்டநிலையில்…

சிம்பு – ஹன்சிகா காதல் முறிந்துபோனதற்கான காரணம் என்று, ஹன்சிகா பற்றிய ஒரு பகீர் தகவலை படு வேகமாக படத்துறையில் பரப்பி வருகிறார்கள்.

என்ன தகவல்?

நடிகை ஜெயபிரதாவின் மகன் சித்தார்த் உடன் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

உயிரே உயிரே என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது சித்தார்த் உடன் நெருக்கமாகிவிட்டாராம் ஹன்சிகா.

சில மாதங்களுக்கு முன் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஹன்சிகாவும் சித்தார்த்தும் ஒரே அறையில் தங்கியதாகவும் சிம்புவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, சித்தார்த் உடன் ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய ஹன்சிகா ஒருகட்டத்தில் சிம்புவைவிட சித்தார்த் பெட்டர் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

சிம்புவை உதறிவிட்டு சித்தார்த்தை காதலிப்பதாக ஹன்சிகா எடுத்த முடிவுக்கு அவரது அம்மாவின் ஆதரவும் கிடைக்க…

அதன் பிறகு சிம்புவிடமிருந்து விலக ஆரம்பித்திருக்கிறார் ஹன்சிகா.

அதனால் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் தகராறு நடந்தபடியே இருந்திருக்கிறது.

இன்னொரு பக்கம், சித்தார்த் உடனான நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வந்திருக்கிறது.

தன்னை காதலித்துக் கொண்டே இன்னொரு பக்கம் சித்தார்த் உடன் ஹன்சிகா கள்ளக்காதல் செய்ததை சிம்புவினால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லையாம்.

எனவேதான் லவ் பிரேக் அப் என்ற அறிவிப்பை வெளியிட்டாராம் சிம்பு.

இந்த தகவல்கள் உண்மையா?

அல்லது வழக்கம்போல் தன்னைவிட்டுப் பிரிந்த காதலிகளை அசிங்கப்படுத்த சிம்பு செய்யும் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா?

காத்திருங்கள்..புதிய தகவலுக்கு!
+

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்..!


இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?

 இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்..!

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்
+