கோலிவுட்டின் சமீபகாலக் கிசுகிசுவாகப் பேசப்பட்டுவரும் செய்திகளில் முக்கியமானது விஜய் சேதுபதியின் சிபாரிசின் பேரில் நடிகை ஐஸ்வர்யாவுக்கு நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுவருவதாகக் கிளம்பியிருக்கும் வதந்திகளே. ஆனால் இதனை ஐஸ்வர்யா மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபமாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அட்டக்கத்தி திரைப்படத்தில் தான் நடித்ததன் மூலமே தனக்கு ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் கிடைத்ததென்று கூறியுள்ளார். மேலும் தான் இந்தப் படங்களில் நடித்ததற்கும், விஜய் சேதுபதி இந்த வாய்ப்புக்களுக்குப் பின்னணியில் உள்ளார் என்ற கிசுகிசுக்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளாராம்.
ஐஸ்வர்யா தற்பொழுது அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகிவரும் திருடன் போலீஸ் படத்திலும், தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்துவரும் காக்கா முட்டை படத்திலும் நடித்துவருகிறார்.
நடிகை ஐஸ்வர்யா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாடா நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment