Saturday, 8 February 2014

Leave a Comment

தமன்னா மவுசு குறைந்து விட்டதா...?



இந்தி படங்களை தமிழில் ரீ-மேக் செய்து வந்த காலம் மாறி இப்போது தமிழ்ப்படங்களை இந்தியில் ரீமேக் செய்யும் காலமாகியிருக்கிறது. அந்த அளவுக்கு கோலிவுட் சினிமா வளர்ந்து நிற்கிறது. அந்த வகையில், கஜினி, ரமணா, சாமி உள்பட பல படங்கள் இந்தியில் ரீ-மேக்காகியுள்ள நிலையில், இப்போது அஜீத் நடித்துள்ள வீரம் படமும் இந்தியில் ரீ-மேக்காகிறது.

இந்த படத்தையும் தமிழில் அப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவே இயக்குகிறார். அஜீத் நடித்த ரோலில் சல்மான்கான் நடிப்பது உறுதியாகி விட்ட நிலையில், நாயகியாக மீண்டும் தமன்னாதான் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு ஜாக்குலின் பெர்ணான்டஸ்க்கு சென்றுள்ளது.

இந்த சேதி மற்றவர்களை விட தமன்னாவுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதனால் உடனடியாக அவர் சிறுத்தை சிவாவை தொடர்பு கொண்டு இந்த படம் இந்தியில் ஒரு பெரிய பிரேக் தரும் என்று நம்பியிருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டீர்களே என்று சொல்லி பீல் பண்ணியிருக்கிறார்.

அதற்கு, இந்தியில் சல்மான்கானை மட்டும்தான் நான் முடிவு செய்தேன். மற்றபடி கதாநாயகி உள்பட மற்ற கேரக்டர்களை படத்தை தயாரிக்கும் ப்ரித்திஸ்நந்தியே முடிவு செய்துவிட்டார். அதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் எனது அடுத்த படத்தில் தமன்னாதான் நாயகி என்பதை இப்போதே அக்ரிமெண்ட் போட்டு தருகிறேன் என்று சொலலி தமன்னாவை மேற்கொண்டு பேச விடாமல் ஆப் பண்ணி விட்டாராம்.

அதனால் அடுத்து பேச வார்த்தையில்லாமல் நம்பிக்கையுடன் திரும்பி விட்டாராம் தமன்னா.

0 comments:

Post a Comment