மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரவிருக்கிறார் ராகினி நந்த்வானி.
பிரசன்னா, சினேகா இருவரின் காதலுக்கும் அதைத் தொடர்ந்து திருமணத்துக்கும் அச்சாரம் போட்ட ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன்.
தற்போது இவர் மலையாளத்தில் ‘பெருச்சாழி’ என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக நடிப்பவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.
தலைவா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண்ணாக நடித்த ராகினி நந்த்வானி, மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

0 comments:
Post a Comment